என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, June 22, 2008

கல்லூரி நாட்களே

கனவோ இது கானலோ
கால்கள் கடந்து வந்த பாதைகள்
நினைவோ இது நிழலோ
நாங்கள் பேசி நடந்த காலங்கள்
தவமோ இது வரமோ
கூடித்திரிந்த எங்கள் பாசங்கள்
சுமையோ இது வலியோ
பிரிந்து போகுமிந்த பாதைகள்
தவறோ இது முறையோ
காலப்பிரிவில் எங்கள் நட்புகள்.

ஒன்றாய் அமர்ந்த இடங்களெல்லாம்
தனியாய் இன்று தவிக்குதடா
நம் பிரிவால் கருத்தக் கரும்பலகை
நினைவாய் நம் பெயர் ஏற்குதடா
துணையாய் நடந்த கால்தடங்கள்
தனியாய் எங்கோ போகுதடா
புன்னகை சுமந்த பூஉதடுகள் யாவும்
வெறுமையின் தனிமையில் உதிருதடா
மொட்டை மாடி பௌர்ணமியும்
வெட்ட வெளியில் காயுதடா

பாலைவன மணல்
பாய்க்கடியில் இருந்தாலும்
சுகமாய் தூக்கம் வந்திடுமே
இலவம்பஞ்சு மெத்தையும்
இனி தூக்கம் திருடிப் போய்விடுமே
குப்பையாய் அறைகள் இருந்தாலும்
ரோஜாவாய்ப் புன்னகை பூத்திடுவோமே
சுத்தம் செய்த வீட்டினிலே
சோகத் தனிமையிலினி தவித்திடுமே
காலப்பிரிவில் எங்கள் நட்புகள்.

இமைகளின்றி இனி கனவும் வருமா
துணைகளின்றி கால்களினி நடக்குமா
சாதி மதம் கடந்த பருவங்கள் பூக்குமா
சின்னச் சண்டகளும் இனி ஏற்படுமா
பின்னர் கூடிக்கொண்ட நேசம் கூடிடுமா
திரையரங்குக் கிண்டல்கள் நடந்திடுமா
தொலைதூரப் பயணங்கள் தொலைந்திடுமா
குற்றாலக் குளியலில் நனைவோமா
சிற்றுண்டிச் சோற்றின் சுகம் வருமா
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கைதான் வந்திடுமா

1 comments:

said...

////இமைகளின்றி இனி கனவும் வருமா
துணைகளின்றி கால்களினி நடக்குமா
சாதி மதம் கடந்த பருவங்கள் பூக்குமா
சின்னச் சண்டகளும் இனி ஏற்படுமா
பின்னர் கூடிக்கொண்ட நேசம் கூடிடுமா
திரையரங்குக் கிண்டல்கள் நடந்திடுமா
தொலைதூரப் பயணங்கள் தொலைந்திடுமா
குற்றாலக் குளியலில் நனைவோமா
சிற்றுண்டிச் சோற்றின் சுகம் வருமா
வண்ணத்துப்பூச்சி வாழ்க்கைதான் வந்திடுமா //////

அருமை. பழைய நினைவுகள் சிந்தையை முற்றுகையிட்டுக்கொண்டது.. வாழ்த்துக்கள்

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal