என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, June 3, 2008

உறைந்து விடுமுன் வந்துவிடு உயிரே

என் கைவிரல்களெல்லாம்
உன் கைரேகைகள்,
என் முத்தம் படாத உனது
கன்னத்தில் இடமும் உண்டோ?

பொழுதுகளின் புலர்வுகளில்
பொதிந்து கிடக்கிறது
உந்தன் மீதான கனவுகள்,
உலகின் இன்பம் யாவையும்
சேர்ந்து வந்த பொக்கிஷம் நீ.

என்னைப் பார்த்து நீ
எப்பொழுதாவது உதிர்த்துவிடும்
சிரிப்பிற்காக உன் பாதங்களிலேயே
சிறைபட்டுக் கிடக்கிறேன் அன்பே.

உன்னிடம் பேசிப் பேசி
உந்தன் பிள்ளை மொழி
பயின்று வருகிறேன்,
பாரில் நான் படித்த
மொழிகளிலே உன் மொழிபோல்
மெய்யான ஒன்றைக் கண்டதில்லை.

நீ "ங்ஙே" என்று
நீட்டி முழக்கும்
வார்த்தைக்கு மட்டும்
அர்த்தங்கள் இருக்கும்
ஆயிரமாயிரம்.

மெல்ல விரிந்திடும்
மேகப் பூக்கள் போல
எட்டு வைத்து நீ
எத்தனித்து நடக்கையில்
இந்த பூமி இன்று
இன்னுமொரு பாக்கியம்
பெற்றுவிட்டது.

சன்னல் திரைக்குப் பின்னால்
சாதுர்யமாய் ஒளிந்து கொண்டு
என்னுடன் ஒளிந்து விளையாடுகிறாய்
எண்ணி இரண்டு நிமிடத்தில்
முகத்தைக் காண்பித்து
மீண்டும் மறைத்துக் கொள்ளுகிறாய்.

போதுமடீ செல்லமே
பத்து மாதம் தாய் வயிற்றில்
நீ ஒளிந்திருந்ததே போதும்.
நித்தம் இனி என்னருகிலேயே
இருந்துவிடடி.
இருபத்தொன்பது வயதுத்
தாகத்தை ஒன்றரை வருடத்தில்
தீர்த்து விட்டாயே செல்லப் பிள்ளையே.

இரண்டு நிமிடம் உன்னைக் காணாமல்
உறைந்து விடுமுன் வந்துவிடு உயிரே
ஒளிந்து விளையாடியது போதும்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal