என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, June 12, 2008

கெட்டிக்க சம்மதமா?

மாமன் பொண்ணு வேறு ஒருத்தனைக் கட்டி, அவனும் விதி முடிஞ்சு
செத்துப்போக, இப்போ மாமன் மகள கட்டிக்குறியான்னு மச்சான் வந்து
கேட்டுபுட்டான். அந்தப் புள்ளைய பார்க்கப் போனவன் அவகிட்ட.......


பத்திரிகையும் வந்தாச்சு
பந்தக்காலும் நட்டாச்சு
பாவி மக முகத்துல
பழசு இன்னும் மறையலியே.

பாக்கு வெத்தல மாத்தயிலே
பக்குவமா நான் பார்த்தா
குனிஞ்ச தல நிமிரலையே
அதுக்கு வெக்கமொன்னும்
வெளக்க்கமில்லையே.

விளக்கனச்சா தாங்கிபுட்டு
வெடியக்கால எந்திருக்கும்
வெறும்பய நானில்ல
சோடி போட்டு சுத்துனதும்
சோளக்காட்டுல வெளாண்டதும்
சாமி கும்பிடப்
போகையில சந்தனத்த
நீயென் நெத்தியில வச்சதும்
குங்குமத்த நான் ஒன்
நெத்தியில வச்சதும்
நீ மறந்து போயிருக்கலாம்
பாவி மனம் மறக்கலடி.

என்ன மறந்த ஒம்மனசு
வேற தாலி கட்டிகுச்சு
சண்டாளி உன்னெனப்பு
இன்னுமென்ன கொலையா
கொல்லுதடி.

உம்புருசன் செத்தப்ப
உலகமே இருண்டுச்சுன்ன
பாவி மகன் நான்
ஒருத்தன் இருக்குறதே
மறந்துபுட்டுப் பேசிபுட்ட..

எந்த சாமி சொல்லுச்சோ
எந்த புண்ணியம் வென்றுச்சோ
ஒங்கண்ண என்கிட்ட
ஒன்ன கட்டிக்க சொன்னதும்
ஒசரத்துல பறந்தது எம்மனசு.

யாரடிச்சு நீ அழுத
சொல்லிபுட்டழடின்னு
வெளாண்டதெல்லாம்
அந்தக் காலம்.
இப்ப மாமங்காரன்
கேக்குதேன் என்னக்
கெட்டிக்கத்தான் சம்மதமா???


-------------------~~~****(0__0)****~~~-------------------

புருசன் இறந்தாலும் எனக்கு ஏற்கனவே கண்ணாலம்
ஆயிடுச்சேன்னுதானே ஊரு பேசுமென்று அவள்
கூறுவதற்கு, மாமனின் பதில்.......

-------------------~~~****(0__0)****~~~-------------------

ஏத்தி வச்ச தீபத்துக்கு
எப்போதும் ஒரே வெளிச்சந்தேன்
நீ சாகுறவர எம்பழய ரத்தினந்தேன்.

இருந்தாலும் ஏசும்
செத்தாலும் தூத்தும்
ஊரு பயகள
ஓரந்தள்ளு.

நீ சமஞ்சு இருந்தப்போ
பச்ச ஓல எடுத்துவர
திக்குத் தெச தெரியாம
காட்டுக்குள்ள போனப்போ
எதிர வந்த ஆயி
ஒம் மாம மவ
புண்ணியச்சின்னு
பொலம்புனது எங்காதுல
இன்னும் ஒலிக்குதடி.

ஒன் ஒடம்பு
ஒரு பொருட்டே இல்ல
ஒம்மனசு மட்டும்
போதுமடி இந்த
மாமங்காரன் ஒதுங்க.

எப்படியோ நடந்து
எங்கேயோ போன
உன் கால்தடம்
எம்மனசு தேடிவர
எக்காளந்தேன் இனி எனக்கு.

வருத்தமெல்லாம்
மூட்ட கட்டு
வருங்காலம் வரும்
தாலி கட்ட.
வானம் பார்க்க
இந்தப் பூமி பார்க்க
இப்போ சொல்லுதேன்
நீ எப்பவுமே என்
மாமன் மக ரத்தினந்தேன்.

1 comments:

said...

இந்த கவிதை என்னை மிகவும் கவர்கிறது. சந்தத்தோடு எழுதியிருந்தால் இன்னும் நன்றாக ரசிக்க முடிந்திருக்கும் இருப்பினும் வாழ்த்துக்கள். பேச்சு நடையில் எழுதும் போது சந்தத்தோடு எழுதினால் நன்றாயிருக்கும்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal