என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, June 30, 2008

நினையாத நினைவு

பாதைகளிலேயே
பயணம் செய்யும்
உங்கள் வாழ்க்கையில்
உடன்பாடில்லை எனக்கு.

பயணங்களுக்கான
பாதைகளை மெல்ல
உருவாக்குவதில் மட்டுமே
உள்ளம் போடுகிறது கணக்கு.

திருமணம், குழந்தை,
தீண்டும் காமம்
இதிலெல்லாம் வீழாது
இருக்க விரும்புகிறேன்.

உழைக்கும் வரை
உழைத்து வாழும் வரை
வாழ்ந்து யாருக்கும்
வருத்தமில்லாமல் போகிறேன்.

என் கால்கள்
எங்கு செல்கிறதோ
அங்கே எனக்கொரு
அழகிய குடில்.

பள்ளம் வரினும்
வெள்ளம் வரினும்
அழியும் உலகில்
வாசிப்பேன் பிடில்.

எண்ணத்தின் போக்கில்
வண்ணத்துப் பூச்சியாய்
இயற்கை அழகில்
குடிப்பேன் தேன்.

இன்ப துன்பத்தில்
இன்னும் தவித்தால்
என் வாழ்க்கை
எங்கும் வீண்.

சிறகு முளைத்ததும்
பறந்திடும் பறவையாய்
துளிகள் பிறந்ததும் மேகம்
துறக்கும் மழையாய் நானும்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal