என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, June 9, 2008

குழந்தை வானம் நீ

என் உயிருள் நுழைந்த உறவே
என் உதிரம் கலந்த கனவே
நேற்று என்பதுன் நினைவோடே
நாளை என்பதுன் கனவோடே
என் திசைகள் யாவையும் நீயானாய்
என் பயணம் முழுவதும் நீயானாய்
என் தாகம் தீர்க்கும் குடமே

நான் தொலைத்த நிமிடம் நீயானாய்
நான் இழந்த தருணம் நீயானாய்
என் தூக்கம் கலைத்த நிஜமானாய்
என் துக்கம் துடைத்த அன்பானாய்
வானம் முழுக்க நீ நிலவானாய்
வசந்தம் முழுக்க நீ பகலனாய்
என் பாதி நிறைக்க நீ பிறந்தாய்
என் மீதி கரைக்க நீ தவழ்ந்தாய்
பூக்கள் பூக்கும் அழகே

நான் நடக்கும் போது என் நிழலானாய்
நான் தூங்கும் பொழுது என் கனவானாய்
பேசும் பொழுது என் குருவானாய்
மௌனப் பொழுதில் நீ துணையானாய்
எனைத் தேடித் தேடி நீ முகிலானாய்
பின் அழுது அழுது நீ மழையானாய்
என் நாடி நரம்பெங்கும் நீதானே
என் தாடி மீசையும் நீதானே
என் எட்டு மாதப் பயிரே

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal