என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Friday, September 26, 2008
இடம் ஒதுக்கப் படுகிறது
சில செருப்புகளுக்கும்
ஒதுக்கப் பட்ட பொருட்களுக்கும்
நடுவே ஒதுக்கப் பட்டிருந்தது
அந்த இடம்!
காண்பாரற்றுக் கிடந்தது
ஆங்கே ஓர் ஓவியம்
சற்றே சாயம் போன ஓவியம்
ஆங்காங்கே கொஞ்சம்
கிழிந்து போனதும் கூட
பல வெயிலுக்கும்
சில மழைக்கும்
வாடை காற்றுக்கும்
கிடந்து கிடந்து
நொந்து நொந்து
அந்த ஓவியம் பெரிதும்
பாதிக்கப் பட்டிருந்தது!
அந்த ஓவியத்திற்கு எதிரே
அழகிய புகைப் படமாய்
ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது
அதில் சில நிஜங்களின்
நிழல்கள் குடும்பமாய்
நின்று கொண்டிருந்தன
அதிலிந்த ஓவியத்தின்
நிழலும் பிரதிபலித்தது!
"செல்லம், சாப்பிடுடா கண்ணா,
இல்லேன்னா அப்பா வந்ததும்
என்னைத் திட்டுவாங்க" என்று
உள்ளே இருந்து வந்தகுரல்
வெளியே உள்ள ஓவியத்தின்
பழைய வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க வைத்தது!
ஓவியத்தின் அருகே
செருப்பைக் கழற்றிவிட்டுவிட்டு
உள்ளே நுழைந்த காலடிச்
சத்தத்தில் விசும்பியது
சற்றே இப்பொழுது
பசிக்கும் அந்த சுமந்த வயிறு
"டேய், என்ன சாப்பிட மாட்டேங்குற
நல்லா சாப்பிட்டாதான்
அப்பா மாதிரி ஆகலாம்!"
அந்த ஓவியத்தின்
அருகே இந்தப் பெற்றோர்களுக்காக
ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது!
Labels:
இடம் ஒதுக்கப் படுகிறது,
ஒளியவன்,
கவிதை,
பாஸ்கர்
Thursday, September 25, 2008
தொலைந்து போயிருக்கிறது
வழிநெடுக விழி அமர்த்தி
வாழ்ந்த வாழ்க்கைதனை
நினைவூட்டி சுவைத்திடவே
நடந்தே செல்லலானேன்
ஊர் எல்கையிலிருந்து!
உயரே தெரிந்த பலகையொன்று
"உங்கள் வரவு நல்வரவாகுக"
என்றென்னை அன்போடு
எதிர்நின்று அழைத்தது
சொப்பனங்கள் சேர்த்தெடுத்தேன்!
எதிரே வேகமாய் வந்த லாரியில்
ஏற்றி வந்த மணலில் கொஞ்சம்
கண்ணில் விழுந்ததால் சற்றே
கவனமாக எடுக்க ஒதுங்கினேன்
தலையில் காய்ந்த சருகொன்று விழுந்தது!
தட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்கையில்
தண்ணிரின்றிக் கிடந்தது
சின்ன வயதில் எல்லோரும் கூடி
ஒன்றாய் விளையாடிய ஆற்றங்கரை,
வழிந்த கண்ணீரில் நனைந்தது அதன் கரை!
Labels:
ஒளியவன்,
கவிதை,
தொலைந்து போயிருக்கிறது,
பாஸ்கர்
Tuesday, September 23, 2008
தண்ணீர் பயம்
கூட்டமாக ஓடிவந்து
கிணற்றில் குதித்து விளையாடும்
ஊர்க்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம்
உயிர்த்தெழுகிறது நண்பனொருவன்
மரணித்த நியாபகம்!
கிணற்றில் குதித்து விளையாடும்
ஊர்க்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம்
உயிர்த்தெழுகிறது நண்பனொருவன்
மரணித்த நியாபகம்!
Labels:
ஒளியவன்,
கவிதை,
தண்ணீர் பயம்,
பாஸ்கர்
Monday, September 22, 2008
அனாதைகள்
கூக்குரலுடனும்
பேரிரைச்சலுடனும்
அவலங்களாய்
அங்கலாய்ப்புகளாய்
அலைந்து கொண்டிருந்தன!
பூக்கடை ஓரத்தில்
பேருந்து நெரிசலில்
நீதிமன்றத்தின் வாசலில்
அரசியல் மேடைகளில்
ஆங்காங்கே அழுதுகொண்டிருந்தன!
எங்கேயும் அனாதைகளை
ஏனென்று கேட்க ஆளில்லை
எனினும், எனதல்ல என்று
கூறுவதற்கு எல்லோரும்
கூடினர், கூவினர்!
பெற்றோர்களே இவைகளைப்
பிறருக்குப் பிறந்தவையென
அடையாளமிட்டு
அலைக்கழித்தனர்
ஆசுவாசப்பட்டனர்!
பெற்றோர்களை அறிந்தும்
பேசமுடியாது முடமான
அனாதைகள் அனைவரையும்
அடையாளப் படுத்தினேன், அவைகள்
தோல்விகளும் தவறுகளும்தான்!
பேரிரைச்சலுடனும்
அவலங்களாய்
அங்கலாய்ப்புகளாய்
அலைந்து கொண்டிருந்தன!
பூக்கடை ஓரத்தில்
பேருந்து நெரிசலில்
நீதிமன்றத்தின் வாசலில்
அரசியல் மேடைகளில்
ஆங்காங்கே அழுதுகொண்டிருந்தன!
எங்கேயும் அனாதைகளை
ஏனென்று கேட்க ஆளில்லை
எனினும், எனதல்ல என்று
கூறுவதற்கு எல்லோரும்
கூடினர், கூவினர்!
பெற்றோர்களே இவைகளைப்
பிறருக்குப் பிறந்தவையென
அடையாளமிட்டு
அலைக்கழித்தனர்
ஆசுவாசப்பட்டனர்!
பெற்றோர்களை அறிந்தும்
பேசமுடியாது முடமான
அனாதைகள் அனைவரையும்
அடையாளப் படுத்தினேன், அவைகள்
தோல்விகளும் தவறுகளும்தான்!
Friday, September 19, 2008
நடுநிசி
மழையின் குளிரில்
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது
வெள்ளிநிலா மறைத்த மேகம்
சில நாய்களின் சத்தம்
சில்வண்டுகளின் இரைச்சலோடு
கூடிச் சேர்ந்து மேலும்
குரூரமாக்கிக் கொண்டிருந்தது
கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு
யாருமில்லை எனினும்
திரும்பிடும் பக்கமெல்லாம்
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்
ஆந்தையின் இரைச்சலும்
வரதட்சணைக் கொடுமையால்
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்
அப்பா வரக்கூடும் அதிகாலையில்
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ.....
மெல்ல மெல்ல நடுங்கியது தேகம்
வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது
வெள்ளிநிலா மறைத்த மேகம்
சில நாய்களின் சத்தம்
சில்வண்டுகளின் இரைச்சலோடு
கூடிச் சேர்ந்து மேலும்
குரூரமாக்கிக் கொண்டிருந்தது
கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு
யாருமில்லை எனினும்
திரும்பிடும் பக்கமெல்லாம்
யாரோ நிற்பதாய் ஒரு எண்ணம்
ஆந்தையின் இரைச்சலும்
வரதட்சணைக் கொடுமையால்
அடித்துத் துரத்தப்பட்ட என்னுடைய
உறுத்தலும் அடங்கிவிடும் விடியலில்
அப்பா வரக்கூடும் அதிகாலையில்
பணத்தோடோ அல்லது பயணச்சீட்டோடோ.....
Thursday, September 18, 2008
நானாக இருந்தால்?
நியாய விலைக்கடையில்
சர்க்கரை இல்லை,
கூடுதல் காசுகொடுத்தால்
கொட்டிக் கிடைக்கிறது
எட்டு போட்டாலும்
ஓட்டுனர் உரிமமில்லை
லஞ்சம் கொடுத்தால்
உடனே கிடைக்கிறது
பாஸ்போர்ட் வாங்க
பல சான்றிதழும் போதாது
காவல்நிலையத்தில் கையூட்டு
கொடுத்தால் நிச்சயம் கிடைக்கிறது
மின்சாரமிழுக்க படிவம்
மட்டும் பத்தாது
காசு கொடுத்தால்தான்
கேபிளும், கம்பமும் கிடைக்கிறது
சில அரசு வேலையில்
சேர அறிவிருந்து பயனேது
சிலரின் சிபாரிசோ
சில்லறையோ இருப்பின் கிடைக்கிறது
வாகனத்தில் செல்ல
அவசியச் சான்றிதழ்கள் பத்தாது
வழிநெடுக கொடுக்க
வாய்க்கரிசியும் இருந்தால் போதுமானது
செய்தித்தாளில் ஒரு செய்தி
"லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; தொடர்கடத்தல்"
இதற்கெல்லாம் ஒருவன் மட்டும் கூடாது
இன்னும் நூறுபேர் வந்தால் போதுமானது
இது எல்லாம் அப்பாவின் புலம்பல்...
கடத்திச் செல்பவர்களில் நானும்
உண்டென்று அப்பாவிடம் சொல்லக் கூடாது
சொன்னால், எனைத் தடுத்துச் சொல்வார்
லஞ்சம் கொடுப்பதே மேலானது
சர்க்கரை இல்லை,
கூடுதல் காசுகொடுத்தால்
கொட்டிக் கிடைக்கிறது
எட்டு போட்டாலும்
ஓட்டுனர் உரிமமில்லை
லஞ்சம் கொடுத்தால்
உடனே கிடைக்கிறது
பாஸ்போர்ட் வாங்க
பல சான்றிதழும் போதாது
காவல்நிலையத்தில் கையூட்டு
கொடுத்தால் நிச்சயம் கிடைக்கிறது
மின்சாரமிழுக்க படிவம்
மட்டும் பத்தாது
காசு கொடுத்தால்தான்
கேபிளும், கம்பமும் கிடைக்கிறது
சில அரசு வேலையில்
சேர அறிவிருந்து பயனேது
சிலரின் சிபாரிசோ
சில்லறையோ இருப்பின் கிடைக்கிறது
வாகனத்தில் செல்ல
அவசியச் சான்றிதழ்கள் பத்தாது
வழிநெடுக கொடுக்க
வாய்க்கரிசியும் இருந்தால் போதுமானது
செய்தித்தாளில் ஒரு செய்தி
"லஞ்சம் கேட்ட அதிகாரிகள்; தொடர்கடத்தல்"
இதற்கெல்லாம் ஒருவன் மட்டும் கூடாது
இன்னும் நூறுபேர் வந்தால் போதுமானது
இது எல்லாம் அப்பாவின் புலம்பல்...
கடத்திச் செல்பவர்களில் நானும்
உண்டென்று அப்பாவிடம் சொல்லக் கூடாது
சொன்னால், எனைத் தடுத்துச் சொல்வார்
லஞ்சம் கொடுப்பதே மேலானது
Labels:
ஒளியவன்,
கவிதை,
நானாக இருந்தால்,
பாஸ்கர்
Tuesday, September 16, 2008
என் இரவுகள் விடியலாம்
பூக்களின் பொன்னூஞ்சலாக
பார்த்துப் பழகிய அவள் முகம்
புதிர்களின் குடிலாக
புலம்பெயர்ந்தது கொடுமைதான்
அது கசக்கி எரியப்பட்டிருக்கலாம்
அல்லது திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்
இவையெதுவும் செய்யாமல்; எனது
இதயத் துடிப்புகளை
காதல் கடிதமென
காகிதத்தில் கொடுத்தமைக்கு
உன் தோழிகளின் நடுவே
அது கேலிப் பொருளாக
ஆக்கியமை புதிர்தான்
இதய அலைவரிசைகளை
இன்னும் புரிந்துகொள்ளாதவளா நீ
அல்லது காதலின் குணங்களை
அறியாதவளா நீ
காதலை வெளிப்படுத்த
காகிதமின்றி வேறு எது நாகரீகம்?
காகிதமென்று என்னிதயத்தை
கேலி செய்த உனக்கும் உன் தோழிகளுக்கும்
ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்
என்றாவது ஒரு நாள்
உன் தோழியோ அல்லது நீயோ
காதல் வசப்படும் தருணம்
கனத்துப் போகும் உன் மனது!
என் காதலும் பொய்யல்ல
நின் ஏளனமும் பொய்யல்ல
இனியாவது விடியட்டும் இரவுகள்!
பார்த்துப் பழகிய அவள் முகம்
புதிர்களின் குடிலாக
புலம்பெயர்ந்தது கொடுமைதான்
அது கசக்கி எரியப்பட்டிருக்கலாம்
அல்லது திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கலாம்
இவையெதுவும் செய்யாமல்; எனது
இதயத் துடிப்புகளை
காதல் கடிதமென
காகிதத்தில் கொடுத்தமைக்கு
உன் தோழிகளின் நடுவே
அது கேலிப் பொருளாக
ஆக்கியமை புதிர்தான்
இதய அலைவரிசைகளை
இன்னும் புரிந்துகொள்ளாதவளா நீ
அல்லது காதலின் குணங்களை
அறியாதவளா நீ
காதலை வெளிப்படுத்த
காகிதமின்றி வேறு எது நாகரீகம்?
காகிதமென்று என்னிதயத்தை
கேலி செய்த உனக்கும் உன் தோழிகளுக்கும்
ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்
என்றாவது ஒரு நாள்
உன் தோழியோ அல்லது நீயோ
காதல் வசப்படும் தருணம்
கனத்துப் போகும் உன் மனது!
என் காதலும் பொய்யல்ல
நின் ஏளனமும் பொய்யல்ல
இனியாவது விடியட்டும் இரவுகள்!
Labels:
என் இரவுகள் விடியலாம்,
ஒளியவன்,
கவிதை,
பாஸ்கர்
Friday, September 12, 2008
நான் மனிதனல்ல
எழுந்துவிட்டேன்
எதற்கும் துணிந்துவிட்டேன்
துவக்கம் அறியாமல்
தொடங்கிவிட்டேன்
அனல் தெரிக்கும்
நெருப்பாய் சிவந்துவிட்டேன்
கானலான நீராய்
இதயம் தொலைத்துவிட்டேன்
கால்படும் இடங்களில்
கரியாகிப் போகிறது புற்கள்
கண்படும் புறங்களெல்லாம்
கும்மிருட்டாய் தெரிகிறது பொருட்கள்
அகிம்சை, அமைதி யாவும்
அஸ்தமனமாகிவிட்ட பொழுதில்
குரோதம், கொலைவெறி யாவும்
குழைத்துப்பூசி நடக்கிறேன்
மரணம் காணாதவன்
மரணமறிவது இல்லை
அவமானம் காணாதவன்
என்னிலை அறிவதுமில்லை
என் வீட்டின் குலக்கொழுந்தை
காமப்பசிக்கு குதறியெடுத்து
சட்டத்தின் கண்ணில்
சிக்காமல் மீண்டுவிட்டான்
மீதமிருந்த மனிதமெல்லாம் தின்று
மிருகமாகிச் செல்கிறேன்
காமுகன் குரல்வளையை
கடித்துக் குதற செல்கிறேன்
மனிதனும் இறைவனும்
அவனை விட்டுவிட்ட போதிலும்
வீரத்துக்கும் என் கோபத்துக்கும்
விடியப்போவதில்லை அவனது அடுத்தநாள்
.
.
.
.
வடிந்தது கோபம்
முடிந்தது சாபம்
தெளிவானது என் பார்வை
சற்றே சிவப்பாகியும் இருந்தது
காவல்நிலையம் செல்கிறேன்
காமுகனைக் கொன்றதற்கு
கடுங்காவல் ஏற்கச் செல்கிறேன்
நான் மனிதனல்ல, ஆனாலும் மானமுள்ளவன்!
எதற்கும் துணிந்துவிட்டேன்
துவக்கம் அறியாமல்
தொடங்கிவிட்டேன்
அனல் தெரிக்கும்
நெருப்பாய் சிவந்துவிட்டேன்
கானலான நீராய்
இதயம் தொலைத்துவிட்டேன்
கால்படும் இடங்களில்
கரியாகிப் போகிறது புற்கள்
கண்படும் புறங்களெல்லாம்
கும்மிருட்டாய் தெரிகிறது பொருட்கள்
அகிம்சை, அமைதி யாவும்
அஸ்தமனமாகிவிட்ட பொழுதில்
குரோதம், கொலைவெறி யாவும்
குழைத்துப்பூசி நடக்கிறேன்
மரணம் காணாதவன்
மரணமறிவது இல்லை
அவமானம் காணாதவன்
என்னிலை அறிவதுமில்லை
என் வீட்டின் குலக்கொழுந்தை
காமப்பசிக்கு குதறியெடுத்து
சட்டத்தின் கண்ணில்
சிக்காமல் மீண்டுவிட்டான்
மீதமிருந்த மனிதமெல்லாம் தின்று
மிருகமாகிச் செல்கிறேன்
காமுகன் குரல்வளையை
கடித்துக் குதற செல்கிறேன்
மனிதனும் இறைவனும்
அவனை விட்டுவிட்ட போதிலும்
வீரத்துக்கும் என் கோபத்துக்கும்
விடியப்போவதில்லை அவனது அடுத்தநாள்
.
.
.
.
வடிந்தது கோபம்
முடிந்தது சாபம்
தெளிவானது என் பார்வை
சற்றே சிவப்பாகியும் இருந்தது
காவல்நிலையம் செல்கிறேன்
காமுகனைக் கொன்றதற்கு
கடுங்காவல் ஏற்கச் செல்கிறேன்
நான் மனிதனல்ல, ஆனாலும் மானமுள்ளவன்!
Labels:
ஒளியவன்,
கவிதை,
நான் மனிதனல்ல,
பாஸ்கர்
Monday, September 8, 2008
படங்களும் கவிதைகளும் - 4
கரைந்திடட்டும் சோகங்கள்
~~~***~~~
உள்ளமெனும் மடை
உடைத்து வெள்ளமென
பொங்கி வரும்
புன்னகையில் கரைந்திடுமே
சேறெனத் தேங்கி நிற்கும்
சோகங்கள்!
கட்டுப்பாடு
~~~***~~~
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
சுதந்திரங்களை விட
சுதந்திரமாக விட்டுவிட்டக்
கட்டுப்பாடுகள் தவறுவதில்லை!
Labels:
ஒளியவன்,
கவிதை,
படங்களும் கவிதைகளும்,
பாஸ்கர்
Friday, September 5, 2008
தாவணிக் கவிதைகள்
எல்லோரும் மழைநேரத்தில்
வானவில்லைப் பார்க்க
வானம் பார்த்து நிற்க
தாவணியோடு நீ
தரைதொட்டுத் தவழுவதைப்
பார்த்து வானவில்லென்று கத்திவிட்டேன்!
~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~
பாவாடைச் சட்டைகளில்
குறும்புகளை ஓரங்கட்டிவிட்டு
தாவணிக்கு நீ தாவியதும்
தவழ்ந்து வந்தது வெட்கம்
~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~
மொட்டை மாடியில்
மழை நனைக்குமுன்
துணிகளை எடுக்க வந்த
நாமிருவரும் முதன்முதலாய்
சந்தித்த போது நனைந்தது
மழையால் துணியும்
காதலால் மனமும்
~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~
நீ அவ்வப்பொழுது
நழுவிடும் தாவணியை
சரி செய்துவிடும் போதெல்லாம்
சரிந்து விழுகிறேன் நான்
~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~
Labels:
ஒளியவன்,
கவிதை,
தாவணிக் கவிதைகள்,
பாஸ்கர்
Wednesday, September 3, 2008
சோத்துக்கு எங்க போவேன்?
மாடு பூட்டி இழுத்த கலப்ப
மச்சியில கெடக்கு ஒரு ஓரமா
அடிமாட்டுக்கு போன காள
அடிமனசுல இருக்கு பாரமா
டிராக்டர் ஒண்ணும் வாங்கிப்போட்டு
டீசலதுக்கு ஊத்திப்புட்டு
உச்சிவான மழையத்தேடி
உழுதுபோட்டேன் நேரம்பாத்து
வெட்டவெளி கானல்நீரா
வானம்பூரா வெள்ளமேகம்
வயக்காட்டுல கிணத்துநீரா
ஊத்தி கிணறு காஞ்சு சோகம்
கதிரு துளுத்து மேல வர
வானம் பொழிஞ்சு ஊத்துச்சு
கடன் பணம் நெனவுக்கு வர
வயக்காட்ட மழ நெறச்சுடுச்சு
தண்ணி போக வழி வச்சு
தழைச்சு வந்தது கொஞ்சோண்டு
நெல்லெடுத்து சேத்து வச்சு
நெருத்தா நஷ்டம் கொஞ்சமுண்டு
சர்க்காரு வெலைக்கு வித்து அதை
கடன கொஞ்சம் அடைச்சேன்
எடுத்து வச்ச கொஞ்சம் நெல்லை
கஞ்சி வச்சுக் குடிச்சேன்
காலேசு முடிச்சு வந்த மவன்
காசு பணம் கேட்டு வந்தான்
கம்பூட்டரு வேலைக்கு போவணும்னு
பட்டணம் போக நிலையா நின்னான்
அங்க இங்க கேட்டு பொரட்டி
அவங்கம்மா தாலியையும் அடகுவச்சு
பட்டணத்துக்கு பொட்டி கட்டி
பையன அனுப்பி வச்சு நாளாச்சு
எங்கிருந்தோ வந்த இடி
எந்தலையில விழுந்தாப்புல
லட்சரூபா இருந்தா உடனடியா
வேலைன்னான், கடல் கடந்த தேசத்துல
பாதி நெலத்தை வித்துப்புட்டு
டிராக்டரையும் கொடுத்துப்புட்டு
பணத்த மஞ்சப் பையில சுத்திகிட்டு
பையன் கையில காச கொடுத்துபுட்டேன்
கொஞ்ச நாளு பொறு ஐயா
கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்
கம்பூட்டருதான் இனியெல்லாமய்யா
வயக்காடெல்லாம் அழிஞ்சுபோகும்னான்
வயக்காட்ட விட்டுப்போட்டான்
கம்பூட்டரு படிச்சுக்கிட்டான்
வயக்காடெல்லாம் அழிச்சுப்புட்டா
சோத்துக்கு எங்க போவேன்?
மச்சியில கெடக்கு ஒரு ஓரமா
அடிமாட்டுக்கு போன காள
அடிமனசுல இருக்கு பாரமா
டிராக்டர் ஒண்ணும் வாங்கிப்போட்டு
டீசலதுக்கு ஊத்திப்புட்டு
உச்சிவான மழையத்தேடி
உழுதுபோட்டேன் நேரம்பாத்து
வெட்டவெளி கானல்நீரா
வானம்பூரா வெள்ளமேகம்
வயக்காட்டுல கிணத்துநீரா
ஊத்தி கிணறு காஞ்சு சோகம்
கதிரு துளுத்து மேல வர
வானம் பொழிஞ்சு ஊத்துச்சு
கடன் பணம் நெனவுக்கு வர
வயக்காட்ட மழ நெறச்சுடுச்சு
தண்ணி போக வழி வச்சு
தழைச்சு வந்தது கொஞ்சோண்டு
நெல்லெடுத்து சேத்து வச்சு
நெருத்தா நஷ்டம் கொஞ்சமுண்டு
சர்க்காரு வெலைக்கு வித்து அதை
கடன கொஞ்சம் அடைச்சேன்
எடுத்து வச்ச கொஞ்சம் நெல்லை
கஞ்சி வச்சுக் குடிச்சேன்
காலேசு முடிச்சு வந்த மவன்
காசு பணம் கேட்டு வந்தான்
கம்பூட்டரு வேலைக்கு போவணும்னு
பட்டணம் போக நிலையா நின்னான்
அங்க இங்க கேட்டு பொரட்டி
அவங்கம்மா தாலியையும் அடகுவச்சு
பட்டணத்துக்கு பொட்டி கட்டி
பையன அனுப்பி வச்சு நாளாச்சு
எங்கிருந்தோ வந்த இடி
எந்தலையில விழுந்தாப்புல
லட்சரூபா இருந்தா உடனடியா
வேலைன்னான், கடல் கடந்த தேசத்துல
பாதி நெலத்தை வித்துப்புட்டு
டிராக்டரையும் கொடுத்துப்புட்டு
பணத்த மஞ்சப் பையில சுத்திகிட்டு
பையன் கையில காச கொடுத்துபுட்டேன்
கொஞ்ச நாளு பொறு ஐயா
கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும்
கம்பூட்டருதான் இனியெல்லாமய்யா
வயக்காடெல்லாம் அழிஞ்சுபோகும்னான்
வயக்காட்ட விட்டுப்போட்டான்
கம்பூட்டரு படிச்சுக்கிட்டான்
வயக்காடெல்லாம் அழிச்சுப்புட்டா
சோத்துக்கு எங்க போவேன்?
Labels:
ஒளியவன்,
சோத்துக்கு எங்க போவேன்,
பாஸ்கர்
Monday, September 1, 2008
ஆத்தாவுக்கு ஆகவேணும் தாயாக
ஏத்திவச்ச அகல்விளக்கா எப்போதும் புன்சிரிப்பு
மழபொழியும் மேகம்போல மறையாத உன்னன்பு
பலகோடி வருசம் நான் செஞ்ச தவத்தால
சாமியே உருமாறி கெடச்சாளே தாயாக
ஊருகண்ணு படுமேன்னு பொத்திப் பொத்தி வளத்தா
கோழிக்குஞ்சும் ஆட்டுக்குட்டியும் துணைக்கு வச்சா
என்னப் பெத்த ஐயா சாமிகிட்ட போன போதும்
கண்ணுக்குள்ள வச்சு காத்துநின்னா எப்போதும்
பட்டியல்ல ஆட்டை பத்திரமா வளத்துப் புட்டு
சந்தைக்கு அனுப்பி வச்சி அழுதுறைவா - அதுபோல
மாப்பிள்ளையும் பாத்து வச்சு நகநட்டும் சேத்துவச்சு
கண்ணாலம்தான் கூட்டிபுட்டா, கைகழுவ நெனச்சுப்புட்டா
கரை கடந்து நானும் பட்டணமும் போயிப்புட்டா
கஞ்சித் தண்ணி குடிச்சியான்னு கேக்கயிங்க நாதியில்ல
ஒத்தப்புள்ள பெத்துப்புட்டு ஒய்யாரமா வளத்துப்புட்டு
ஒத்தையில நிப்பதுதான் உந்தலையெழுத்தா?
மருசெம்மம் எடுத்து ஆகவேணும் நானொனக்குத் தாயா!
மழபொழியும் மேகம்போல மறையாத உன்னன்பு
பலகோடி வருசம் நான் செஞ்ச தவத்தால
சாமியே உருமாறி கெடச்சாளே தாயாக
ஊருகண்ணு படுமேன்னு பொத்திப் பொத்தி வளத்தா
கோழிக்குஞ்சும் ஆட்டுக்குட்டியும் துணைக்கு வச்சா
என்னப் பெத்த ஐயா சாமிகிட்ட போன போதும்
கண்ணுக்குள்ள வச்சு காத்துநின்னா எப்போதும்
பட்டியல்ல ஆட்டை பத்திரமா வளத்துப் புட்டு
சந்தைக்கு அனுப்பி வச்சி அழுதுறைவா - அதுபோல
மாப்பிள்ளையும் பாத்து வச்சு நகநட்டும் சேத்துவச்சு
கண்ணாலம்தான் கூட்டிபுட்டா, கைகழுவ நெனச்சுப்புட்டா
கரை கடந்து நானும் பட்டணமும் போயிப்புட்டா
கஞ்சித் தண்ணி குடிச்சியான்னு கேக்கயிங்க நாதியில்ல
ஒத்தப்புள்ள பெத்துப்புட்டு ஒய்யாரமா வளத்துப்புட்டு
ஒத்தையில நிப்பதுதான் உந்தலையெழுத்தா?
மருசெம்மம் எடுத்து ஆகவேணும் நானொனக்குத் தாயா!
Labels:
ஆத்தாவுக்கு ஆகவேணும் தாயாக,
ஒளியவன்,
கவிதை,
பாஸ்கர்
Subscribe to:
Posts (Atom)