என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, June 18, 2008

காதலியல் - 2

என் நண்பன் கேட்டான்....

1.
கண்டவுடன் எப்படியடா
காதல் வருமென்றான்,
கடவுளை நேரில்
கண்டாலும் நம்ப
மாட்டாயா என்றேன்.

2.
மணிக்கணக்காய் என்ன
பேசுவாயென்றான்,
மௌனம்தான் என்றேன்.

3.
காதலை முதலில்
யார் சொன்னதென்றான்
அவள் கண்களும்
என்னிதயமும் என்றேன்.

4.
காதலிப்பதனால் நீ
கண்ட பயனென்னவென்றான்,
கண்டுகொண்டேன்
என்னை நானேவென்றேன்.

5.
அப்படி எதுதான்
அவளிடம் சிறப்பென்றான்,
அவளை "எது" என்று
அஃறினையில் கூறாதேயென்றேன்.

3 comments:

said...

இவ்வரிகள் மிக நன்றாக உள்ளது. கவிதையருமை தோழரே! வாழ்த்துக்கள்

said...

மணிக்கணக்காய் என்ன
பேசுவாயென்றான்,
மௌனம்தான் என்றேன்.

3.
காதலை முதலில்
யார் சொன்னதென்றான்
அவள் கண்களும்
என்னிதயமும் என்றேன்./


அருமையான வரிகள்

said...

நன்றி என் நட்புகளே!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal