என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, June 12, 2008

தத்தளிக்கிறேன்

பெண்மேகமே நீ எங்கு போகிறாய்
என் தேசத்தை தொட்டுப் போகிறாய்
வான் வெளியிலே நீ கோலமாகிறாய்
என் சுவாசத்தை நீ உடைத்துப் பார்க்கிறாய்
அந்தத் தீண்டலில் மழை உதிர்த்துத் தூறினாய்
இரத்த நாளமதை நீ நனைத்துப் பாடினாய்.

பூ சுமந்து மலர்ந்தவேளை நீர் தெறிக்கிறாய்
நான் உதிர்ந்துபோகும் முன்பேனும் வந்து சேருவாய்!
நீ பகிர்ந்த வார்த்தையெல்லாம் சேர்த்துவைக்கிறேன்
அதில் நான் குதித்து கொஞ்சம் நீந்தப் பார்க்கிறேன்
வார்த்தையது தீருமுன்னே வந்து சேரடி
என் நெற்றிப் பொட்டில் ஒரு முத்தமேனும் இட்டு நிரப்படி.

நான் திரும்புகின்ற பக்கமெல்லாம் உந்தன் முகமடி
நான் கேட்கத்துடிக்கும் ஒலிகள் யாவும் உந்தன் குரலடி
உன் பக்கச்சூட்டில் பத்திரமாய் இருந்தேனடி, இன்று
நீயில்லா இரவு கூட எனைக் கொல்ல வருதடி.

ஏழு மாதம் என் வானமெங்கும் உந்தன் நிறமடி
நான் தின்று தீர்த்த உணவு எல்லாம் நிந்தன் சொல்லடி
நீ இல்லாமல் போனதெண்ணி வாடி நிற்கிறேன்
நீ வரும் வேளை மட்டுமெண்ணி தேதி கிழிக்கிறேன்
நான் எழுதி வைக்கும் கவிதை யாவும் எடுத்து வைக்கிறேன்
நீ வந்தவுடன் காண்பிக்க திட்டமிடுகிறேன்.

நான் கொடுத்த உயிரினை நீ வளர்த்தெடுக்கிறாய்
நாலு மாதம் தாய்வீடென தொலைந்து நிற்கிறாய்
நகம் வெட்டும் வேளையிலேயே சத்தம் போடுவாய்
ஆனால் பிள்ளை சுமக்க மட்டும் சிரித்துப் பூக்கிறாய்
நான் கொடுத்த பிள்ளையை வரமென்கிறாய்
கொடுத்து உன்னை வாட்டுகிறேனோவென தத்தளிக்கிறேன்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal