என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, June 2, 2008

உன்னிடம் ஒரு உண்மை சொல்ல வேண்டும்

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் முறை
எனது உள்ளுணர்வுகளை
எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது.

நீ ஒவ்வொரு முறை
நீண்ட அன்பினை
செலுத்தும்போதும்
சத்தியப் பிரமாணம்
எடுத்துக் கொள்கிறேன்
எப்படியாவது கூறிவிட வேண்டுமென்று.

மாற்றங்கள் இந்த உலகில்
மாறாதது எனும் தத்துவம்
இன்னும் உனக்குப் புரியாமல்
இருப்பதுதான் எனக்குச் சங்கடம்.

உள்ளுணர்வோ அல்லது
உன் பெண்ணுணர்வோ
தெரியவில்லை,
உன்னை என்னிடம்
நீங்கள் யாரையும் இதுவரைக்
காதலித்தது இல்லையல்லவா
என்று கேட்கத் தூண்டுவது.

ஒவ்வொரு முறையும்
ஓடி ஒளிந்து கொள்ளுகிறேன்
என் உதட்டுக்கடியில்
எட்டிப்பார்க்கும் பொய்யினுள்.

முன்னொரு நாளில்
மூர்க்கமாய் ஒரு பெண்ணைக்
காதலித்தேன், அவளது
குடும்பச் சூழலில்
என்னை விட்டுப் பிரிகிறேன்
என அவள் கூறிச்சென்ற
நாளிலிருந்து நான்கு வருடம்
நித்திரையில்லாத இரவுகளாகக்
கழித்த நாட்கள் மட்டும்
கணக்கிலடங்காது.

உன்னை மணந்தபிறகுதான்
உண்மை உணர்ந்தேன்,
மாற்றங்கள் என்றும்
மாறாதது என்று.
நிச்சயம் உன்னிடம்
நிதர்சனமாய்தான் வாழுகிறேன்.

இன்று இரவும்
இனிய கனவுகளுடன்
உறங்கிவிட்டாய் - நான்
உறங்கா உண்மையுடன்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal