என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, June 5, 2008

மானிடனே

ஆதியிலும் நீ இல்லை
முடிவிலும் இருக்கப் போவதில்லை
அந்தரத்தில் பிறந்த
அற்ப மானிடா
உன்னைப் பற்றிக் கூறுகிறேன் கேள்.

உனது மதம்
உனது சாதி
உனது நாடு
உனது மொழி
உனது உனது என்று நீ
உழன்று கொண்டிருக்கும் யாவையும்
பிறப்பன்று உனக்குப் புகுத்தப்பட்டது,

இச்சையில் பிறந்த
எச்சில் மனிதனே
அன்பு ஒன்றைத் தவிர வேறு
அனைத்தையும் தவிர்த்து விடு.

நீ காணும் உனது
நிறம் உனதல்லவே!
உன் மீதுள்ள சாயம் எல்லாம்
உன்னோடு ஒட்டிக் கொண்டவை.

உடலை மறந்து
உண்மை ஆன்மாவை அறி.
யாவரும் மனிதர்களே
எங்கும் உன் சக பயணிகளே!

நீ எதையும் கொண்டு வராதது போல்
நீ எதையும் கொண்டு போகவும் இல்லை
உனது மகிழ்ச்சி மாயை
உனது வருத்தம் மாயை
நிதர்சனம் என்பது
நிச்சயம் அன்பு ஒன்றுதான்.

நீ சாலையில் எச்சில்
துப்புவதிலிருந்து பிறரைத்
தூற்றுவது வரை,
எண்ணற்ற வேலைகளை
எடுத்து எ(றி)(ரி),
உன் கண்களில் அன்பு மலரட்டும்
உன் காதுகளில் அன்பு ஒலிக்கட்டும்
உன் வாய் அன்பு பேசட்டும்
உன் உணர்வுகளில் அன்பு வழியட்டும்.

முதலில் உன் சமுதாய
முகத்திரையைக் களைந்து எறிந்து
மனிதனை மனிதனாக
மட்டுமே பார்த்துப் பழகு.

2 comments:

said...

oru software eng ivalavu arumaiyana sinthanai kala................

said...

இந்த அளவுக்கு ஆச்சரியமா கேட்குற அளவுக்கு மென்பொருளாளனின் நிலை இருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது வருத்தம்தான்! :-)

நன்றிங்க.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal