என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, June 21, 2008

யாருக்காக உயிர்?

வேட்டை நாய்க்கும் என்
வேலைக்கும் என்ன வித்தியாசம்?
ஏவியதும் கொன்று தீர்ப்பது
ஏவுகணை மட்டுமல்ல
ஏவியவன் நானும்தான்.
வீசுகின்ற குண்டுகள் யாவும்
வீணடிக்காமல் உயிர்குடிப்பது
வேறென்ன தந்துவிடப் போகிறது
வீரமென்ற சொல்லைத் தவிர?

இந்தியாவின் வீரச்சக்கரமொன்று
இன்று வாங்கப்போகும் தருணம்
இனிய கற்பனையோடு
இரவு கழிக்கவெண்ணிய எனக்கு
வந்த கனவெல்லாம் குருதி
வழிந்தோடிய சதையும்
வீரர்களைக் கொன்று குவித்தவென்
வீரமும் தான்.

தண்டிப்பதா வீரம்?
மன்னிப்பதே வீரம்!
மனிதனின் காழ்ப்புணர்வுகளுக்கு
மொத்த பிம்பமாய்
எல்லையில் நான்
எத்தி விளையாடிய
கொடூர நேரங்கள்.

எல்லை தாண்டிய
ஏதோ ஒரு பெண்ணின்
கண்ணீருக்குத் தெரியாமலிருக்கட்டும்
இன்று நான் வீரச்சக்கரம் வாங்குவது.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal