என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, June 20, 2008

நானெடுத்த முத்து

தவம் முடியுமுன்னே
சவமானவென் பெற்றோரால்
தீட்சைப் பெறத்
தகுதியில்லா சீடனானேன்
கூடிநின்ற சொந்தங்கள்
தேடியொரு பெண்பார்த்து
தாடியோடு இருந்த என்னை
தாலிகட்டக் கூறியது.

தேவையென்று இனியெனக்கு
தீருமிவ்வுலகில் எதுவுமில்லையென
வீதி கடந்தேன்
விதி கடந்தேன்
ஓடியொரு புது ஊரில்
ஒளிந்து கொள்ள
இடம் பார்த்தேன் - அங்கேயென்
தடம் பதித்தேன்.

ஓடுகின்ற காலமதில்
ஒரிரண்டாண்டுகள் கழிந்திட
வெளிச்சமற்ற ஓரிரவில்
வீலென்ற சத்தத்துடன்
குழந்தையின் அழுகுரல்
கேட்டேன், தூக்கினேன்.

தேடிவர யாருமின்றி
தேதி பல ஓடிடவே
நாடியெனை வந்தடைந்த
நன்மலரை நான் வளர்த்தேன்.
இறுதி மனிதன்
இருக்கும்வரை யாரும்
இங்கே அனாதையில்லையென்று
கூவிக் கூவி தினமந்த
குழந்தயதின் உயிர் வளர்த்தேன்.

பத்து வருடம்
பகலிரவாய் கழிந்துவிட
தொலைத்திட்ட குழந்தைதனை
தேடிய சொந்தம் வர
உயிரினை திருடக்கொடுத்து
உடம்பெல்லாம் சுமையாக
காலெடுத்து நடக்கும்போது
காதுகளில் சேதியொன்று கேட்டது
இறுதி மனிதன்
இருக்கும்வரை யாரும்
இங்கே அனாதையில்லையென்று....

1 comments:

said...

ஒளி! கவிதை அருமை. ஒன்றை நன்றாய் கவனித்தீரா? சந்தக்கவிதை உமக்கு நனறாய் வருகிறது. இக்கவிதையின் பெரும்பகுதி சந்தத்தால் மிளிர்கிறது.

எடுத்துக்காட்டு:-

///தேடிவர யாருமின்றி
தேதி பல ஓடிடவே
நாடியெனை வந்தடைந்த
நன்மலரை நான் வளர்த்தேன்.///

///பதினைந்து வருடம்
பகலிரவாய் கழிந்துவிட
தொலைத்திட்ட குழந்தைதனை
தேடிய சொந்தம் வர///

நீர் வாழ்க! நின் குலம் வாழ்க! பிரிக்கவே முடியாதது? நீரும் சந்தமும்!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal