என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, June 28, 2008

விளக்கணைப்பு

கூடியிருந்த கூட்டத்திற்கும்
கடமை தீர்ந்துவிட்ட
பெற்றோர்களுக்கும்
புரியவில்லை வாழப்
போகிறவள் நான்தான் என்று.

அம்மாவின் தீக்குளிப்பு
அரங்கேற்ற விளக்கங்களிலும்
அப்பாவின் தற்கொலை
அவசரப் பிரகடனத்திலும்
இறந்து போனது மட்டும்,
இன்னும் நினைவிலிருக்கும்
என் காதல்தான்.

காத்திருந்தக் காதலனின்
கதியென்னவென்றுத் தெரியாது,
தாடியுடன்; முடிந்தால்
குடிபோதையுடன் ஏதோ
ஒரு மதுவிடத்தில்
ஒட்டுமொத்தப் பெண்களும்
இகழப்படலாம்
இந்தப் பெண்களே
இப்படித்தான் என்ற
அவச்சொல்லுக்கு நான்
அடையாளமாகிவிட்டேன்.

சாதிக்கும், கௌரவத்திற்கும்
சோர்ந்து போய்விட்ட
காதல்களில் எனது
காதல் எத்தனையாவது
என்று தெரியவில்லை.

இனி இன்று நடக்கப்போகும்
இந்த முதலிரவில்
என் காதலன் முகம்
எங்கோ மறையுமா?
அது மறையவில்லையெனில்
அணிந்து கொண்ட தாலிக்கும்
விவரமறியாத கணவனுக்கும்
வெட்டுகின்ற குழியல்லவா?

இங்கே அணையப்போகும்
இந்த விளக்கோடு
எந்தன் காதலின்
எல்லா நினைவுகளும்
அழிந்து போகட்டும்
அங்கே தவிக்கும்
என் காதலனுக்கு
என்றுமே எந்தன்
நிலை தெரியவேண்டாம்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal