என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, June 14, 2008

விழிமின்

உன்னை மலரென்று
உரைப்பதெல்லாம்
உனைத் தூற்றவே,
உன்னை பூமியென்று
போற்றுவதாவும்
உன் ஓட்டம் தடுக்கவே,
உன்னை மெல்லியவளென
உளருவதெல்லாம் வெறும்பேச்சே!

கோழிச்சூட்டில் உய்த்திருக்கும்
பெண் முட்டைகளே
நீங்கள் குஞ்சுகளாய்ப்
பொறியும் காலம் கடக்கின்றனவே
நித்திரை இன்னுமென்றால்
பொரித்து விடுவார்களுனை!

பேருந்தில் தேகமுரசுபவன்
பாதங்களை மிதித்தெழுங்கள்
வாழ்க்கைத் துணைக்கு
வரதட்சனை கேட்பவனை
முதிர்கன்னனாக்குங்கள்
புணர்வுக்காக இப்பூமியின்கால்
பிறக்கவில்லைப் பெண்டிரே - நீங்கள்
புதுமைப் பெண்களே
என் பாரதியின்
எழுச்சிமிக்க தீச்சுடர்களே!

சுதந்திரமடைந்த நிலத்தில்
சுதந்திரமடையாமலிருக்கும்
அக்னிக் குஞ்சுகளே
அவசியப் பொழுதில்
கொதித்து எழுங்கள்
கல்வித் தேவைக்காவது.

வரதட்சனை வாங்கும்
வளைகர ஆண்களே
பெண்கள் பெட்டிப்பாம்பல்லவே
பெரும் தீச்சுடர்!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal