என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, June 16, 2008

சின்னஞ்சிறு வரிகள் - 2

1.
இதழ்கள் விரிவதால்
சுருங்குகிறது துன்பம்,
புன்னகை.

2.
நீயும் நானும்
ஒன்றென்கிறது
இரு கை சேரும் வணக்கம்.

3.
ஒன்றும் ஒன்றும்
பெருக்கியதால்
மூன்றும் ஒன்றானது
குடும்பம்.

4.
மின்சாரமில்லாத
தருணத்தில்
தேடித் தவிக்கிறது கைகள்
பழைய விசிறியை.

5.
ஏதோ விரக்தியில்
இவ்வுலகில் அனைவரும்
ஏமாற்றுக் காரர்களென்று
கூறிய என்னைக் கேலி
செய்து சிரிக்கிறது குழந்தை.

1 comments:

said...

///இதழ்கள் விரிவதால்
சுருங்குகிறது துன்பம்,
புன்னகை.///

என்ன முரண்! ஆனாலும் என்ன அழகான தத்துவம்! அருமைதோழரே!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal