என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, June 7, 2008

குட்டிச் சுவர்

கல்லூரியின் வசந்தங்களில்
மலரும் காளையர்களனைவரும்
காட்டுக்கு ராஜாதான்.

உச்சி வெயிலுக்கும்
அந்த மாமர நிழலுக்கும்
நாங்கள் பகிர்ந்து கொண்ட
இன்ப துன்பங்கள் புரியும்.
கல்லூரியின் குட்டிச்சுவரின்
கும்மாளத்தைக் குத்தகைக்கு
எடுத்தவர்களில் நாங்களும் உண்டு.

பசியில் சிறு குடலைப்
பெருங்குடல் திண்ணும்
வேளையிலும் பசியறியாது
பரிமாரிக் கொண்ட
நகைச்சுவைகளும்
நையாண்டிகளும்
பசுமரத்து ஆணியாய்
பதிந்து விட்டவை.

பயில வந்தப் பாடங்களை விட
பழகிக் கொண்ட பாடங்கள்தான் அதிகம்.
பெண்களைப் புரிந்து கொள்வதிலேயே
புலர்ந்து மறையும் எங்கள்
இளமைச் சூரியன்.
தேர்வுகளின் மதிப்பட்டையைப்
பொருட்படுத்தாத நாங்கள்
மதி பெண்களுக்கு மதிப்பெண்கள்
போட மறந்ததில்லை.

சகாராவின் தூறல்களாய்ச்
சில சில புன்னகைகளும்
எங்களுக்குப் புண்ணியச்
சின்னமாகிப் போன
செருப்புகளும்தான்
பல நேரம் பதிலாக வந்திருக்கிறது.

5 வருடம் கழித்து அதே
குட்டிச்சுவரை நோக்கி
கால்கள் பயணித்துக் கொண்டிருக்கிறது.
எனது தங்கையைக்
கிண்டல் செய்தவனைத் தட்டிக்கேட்க.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal