என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, June 16, 2008

அன்புத் தந்தை

என்னுயிரே நீங்களென
புகழ்ந்துவிடினும்
குறைந்துவிடுமோ நின்புகழென
உன்னுயிரே என்றே புகழுகிறேன்,
ஆம்
என்னுயிரை விட
உம்முயிரை உயர்வாக எண்ணுவதால்.

சிந்தனைகளின்
சிற்பமாய் நான் கண்ட
என் முதல் குரு
எனது நிழல், என் தந்தை.

கடைசி மகனாயிருப்பினும்
குடும்பத்தில் சிறந்தமகனாகி
தொண்டுகள் புரிந்திட்ட
தேவதை நீங்கள்.
பதினேழு வயதில்
பாவியாய் நின் தந்தையைத்
தொலைத்திட்டு, தாயையே
தந்தையாகவும் எண்ணியவர் நீங்கள்.

உங்களிலிருந்தே தொடங்குகிறேன்
எனது புனித பயணத்தை,
உங்களிலிருந்தே கற்றுக்கொள்கிறேன்
தாய் தந்தையர் பக்தியினை,
உங்களிலிருந்தே பார்க்கிறேன்
இந்த நீண்ட உலகத்தை,
உண்மையில் உங்களிலிருந்தே
வார்க்கிறேன் நான் என்னை.

தந்தையென்பவனே கோவில்
தாயென்பவளே கடவுளெனக்
கூறிய எனது அறிவுத்தந்தை நீர்
உங்களன்புக்கு நானடிமை கேளீர்.

ஒன்று முதல் பத்துவயதுவரை
அடம்பிடிக்கும் என்னை
அன்பு ஒன்றே காட்டி வளர்த்தீர்
பதினொன்று முதல் பதினைந்துவரை
நன்மை தீமையை சொல்லிக் கொடுத்தீர்
பதினாறு முதல் இன்றுவரை
என் தோழனாகவே இருக்கிறீர்.

இதோ நான் வளர்ந்துவிட்டேன்
எனக்காக அலைந்த உமது
கால்களுக்குச் செருப்பாக நிமிர்ந்துவிட்டேன்.
இனி என்கடன் இருக்கிறது.

இன்று முதல் தலைகிழாய்த்
தொடங்குகிறது உங்கள் பயணம் எனக்கு.
ஆம்,
நீர் இப்பொழுது என் தோழன்,
இறுதியில் நீர் என் குழந்தை.
உங்களது குழந்தைப் பயணத்திற்காக
என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

இன்று அல்ல
என்றுமே எனக்கு
தாய், தந்தையர் தினம்தான்!

1 comments:

said...

அட! என்ன அழுத்தமான வரிகள். வியக்கிறேன் தோழரே!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal