என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, June 12, 2008

உயிரை ஊதாதே

உனது முற்பிறப்பு அறிவாயா?
உனது பிற்பிறப்பாவது அறிவாயா?
இல்லையென்பது உன்பதிலெனில்
இருக்கின்ற உயிரை
மாய்த்துக் கொள்ள
மட்டுமெதற்கு இத்தனைப் போராட்டம்?

மரணம் வெல்ல
மருத்துவம் துடிக்கையில்
மரணப்பாதை நோக்கி
ஓடிடும் அற்ப மானிடா
நீ இறங்குமிடம் வருமுன்
எதற்காக இறங்குகிறாய்?

நீ ஊதித் தொலைக்கவா
நின் தாய் பத்துத்திங்கள்
கரு சுமந்தாள்,
பத்திரமாய் உனை ஈன்றாள்.

தற்கொலை செய்வது
குற்றமாம், புகையிலை
பிடிப்பது ஞாயமாம்,
சவுக்கடி கொடுக்க வேண்டம்
சட்டத்திற்கு.

பழக்கத்தை மாற்றமுடியிலையா
பழகிக்கொள் கீழிருக்கும்
ஏதோ ஒன்றை.

புத்தகம் படி,
தங்கையுடன் பேசு,
தம்பியுடன் விளையாடு,
தாயின் மடியில் தூங்கு,
தந்தையின் கால் அமுக்கு,
இசை படி,
கவிதை எழுது,
நம்பிக்கையிருந்தால்
இறைவனை நாடு.

நீ பிடிக்கும்
வெள்ளைப் புல்லாங்குழலில்
வருவது புகையல்லவே
உனது உயிரல்லவா.
சிந்தனை கொள்
உனது இன்பத்திற்கு
என் ஆயுளையும் கரைக்கிறாய்.

புகையிலை பிடிப்பதை
நிறுத்தென்கிறேன்,
முடியவில்லையெனினும்
கீழே போடுவதையாவது
அணைத்துவிடு.
எனது ஆயுள்
இன்னும் இரண்டு
நாள் நீடிக்கட்டும்.

2 comments:

said...

அழகான வரிகள்

said...

நன்றி திரு.திகழ்மிளிர்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal