என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, June 7, 2008

தென்றலுக்கு நன்றி

காலைக் கதிரின்
சிவப்புக் கோடுகளில்
கிழிந்து திறக்கிறது இதயம்
இன்றைய பொழுதின்
இடையறாக் கவலையின்
தொடக்கத்திலேயே மறைகிறது
மீதியிருந்த நம்பிக்கை.

இரவு முழுதும்
சிந்தித்துக்கொண்டிருந்ததில்
சிவந்து விரிந்தது கண்கள்
நொடிப் பொழுதில்
தோன்றி மறையும்
மின்னலென வெள்ளை
ஆடைகளும் முகத்தருகே
எச்சில் தெரிக்க
பணம் எங்கே?
உயிர் வேண்டுமா இல்லையாவென
கேட்பது போலான
வார்த்தகளின் கற்பனையும்,
சற்று நேரத்திலேயே
மின்னலின் தொடர்ச்சியாக
ஒலி வேகத்தில் வரும்
இடியைய்ப் போல
தலைக்குள் ஏற்படும்
சத்தம், முழுதும்
அமைதியான எனது
படுக்கையில் எனக்கு
மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறது.

எண்ணங்கள் யாவையும்
எடுத்து எறிந்துவிட்டு
எனது இறுதி
நம்பிக்கையான
நண்பனின் வீடுநோக்கி
கால்கள் நகருகிறது.
எனது தாயின்
அறுவை சிகிச்சையின்
செலவுக்கு அல்லாடிக்
கொண்டிருக்கும் எனக்குப்
பணம் புரட்டிக் கொடுப்பதாய்ச்
சொன்ன அவன் வார்த்தைகள்
மட்டும் காதுகளில் வழிந்து
மூளைக்கு நம்பிக்கை
ஆக்ஸிஜன் அனுப்புகிறது.

நடைபாதையில் எங்கெங்கோ
நட்டு வைத்த மரங்களின்
குளிர்ந்த தென்றல்
குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருந்த
அறிவின் தூக்கத்தைக்
கலைத்து எழுப்பியது.
தென்றலுக்கு நன்றி!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal