என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, June 10, 2008

மழைக்கு மகுடங்கள்

1.
சர்ரென கீறிச்செல்லும்
வாகனத்தின் சன்னல்களில்
மெதுவாய்க் கோலம்போடும் மழை.

2.
துன்பத்திற்குப் பின்
இன்பமாம் - ஆமாம்
நிறைந்த புழுக்கத்துக்குப் பின்
நிறைந்தது குளிர் மழை.

3.
நீ வருவதை
நானறிவேன்,
இடியும் மின்னலும் எதற்கு?

4.
என்னையும்
என் இன்பத்தையும்
பல பரிமாணங்களாக்குறாய்
சன்னலோரத் துளிகளில்.

5.
நீ கிளப்பிவிடும்
மண்வாசனையில் எனது
மழலைக் குறும்புகளின்
நியாபக அணிவகுப்பு
நினைவில்.

6.
சன்னமாய்ப் பெய்யும்பொழுது
மகிழும் உள்ளம்
சரளமாய்ப் பெய்யும்பொழுது
வயக்காட்டில் ஊன்றுகிறது
ஞாபகங்களை.

7.
நீ என்னைத் தொட்டுச்சிதறவும்
துன்பங்களும் கரைகிறது
மழையோடே.

8.
அறிஞனின் அறிவுரையைக்
கேட்பது போல்
மௌனமாய் நனைகிறேன்
மழையில்.

9.
என் தோட்டப்
பூக்களுக்கு
முத்துமாலை அணிவித்து
முடிந்திருக்கிறது மழை.

10.
மழைப் பொழுதில்
மெருகேறிவிடுகிறது
என் தாய் கொண்டுவந்தத்
தேநீர்!

11.
உன்னில் நனைந்து
காய்ச்சல் வருமென்று
விடுமுறை விடப்பட்ட
பள்ளி மாணவர்கள்
தெருவில் மகிழ்ச்சியை
உன்னோடே கொண்டாடுகிறார்கள்.

12.
மழையே நீ,
எந்தக் கண்ணகியின்
கண்ணீரோ தெரியவில்லை
வெள்ளமாய்ப் பாய்ந்து விடுகிறாய்,
எந்தக் காதலியின்
ஆனந்தக் கண்ணீரோ தெரியவில்லை
அறுவடைக்குத் தயாராக்குகிறாய் பயிரை.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal