என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, May 30, 2008

என் வெளிச்சம், எனக்கு உபயோகமில்லாமல்

எதற்காக விடிகிறது வானம்?
எதற்காக அடைகிறது பொழுது?
எது எப்படி இருப்பினும்
எல்லா நாளும் எனக்கு இன்னொரு நாள்தான்.

வானம் பார்த்து
வைத்து விட்ட நாற்று
செழித்து வளர்ந்து
சேருமிடம் சென்றுவிட்டது.

பூமி பார்த்து
பெய்த மழை
வழிந்து வன்கடல்
புகுந்து மேகமாகிவிட்டது.

உயரமாய் நான்
வளர்ந்ததுதான் குற்றமோ,
தோதாக சாதகத்திலிருக்கும்
தோசம்தான் குற்றமோ
அறியவில்லை நான்.

எனது வருமானம் நம்பியே
எட்டு வைக்கும் எனது
தங்கைகள் மூவரையும்
தாங்கிப் பிடிப்பது நாந்தான்.
என் தந்தையிருந்த இடத்தை
எண்ணிரண்டு பதினாரு வருடம்
நிரப்புவதும் நாந்தான்.

என்னுடைய தேவைகள்
சுருங்கி சுருங்கி
ஒவ்வொரு மாதத்திற்குமான
அத்தியாவசியத் தேவையிலொன்று
இப்பொழுது தேவையில்லாமல்
மரித்துவிட்டது.

என்னவோ தெரியவில்லை
எரிந்து எரிந்து மெழுகாக
வெளிச்சம் கொடுத்த என்
வாழ்வில் எங்கும்
வெளிச்சமென்று எதுவும்
வந்துவிடவில்லை.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal