என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, October 28, 2008

பிரிவாற்றாமை

இந்தக் கவிதையை 2008 தீபாவளி மலரில் வெளியிட்ட சிஃபி இணையத்திற்கு நன்றிகள் பல.
http://tamil.sify.com/fullstory.php?id=14781596

அன்பே! என் உயிரினில் கலந்த உறவே!
அனுதினமும் விடியலும் இரவுமாய் நீயே!
தாய்க்கும் எனக்குமான உறவு தொப்புள்கொடி
தாரமே, உனக்கும் எனக்குமான உறவு தாலிக்கொடி.

தாயின் அண்மை அவசியமில்லாது போன
தருணம் முதன்முறை எனக்கு உன்னோடுதான்.
தந்தையின் வழிகாட்டல் அவசியமில்லாது போன
தருணம் முதன்முறை எனக்கு உன்னோடுதான்.

ஆம், நீ எனக்குத் தாய்தந்தையுமானவள்.
அங்ஙனமே என்னால் நீ தாயுமாகப் போகிறவள்.
கருவோடு நீ பெருவயிறோடு நிற்கையில்
நெருப்போடு நீ நிற்பதாகவே தவிக்கிறேன்.

தலைப்பிரசவம் பெண்ணுக்கு மறுபிறப்பாம்
தலைமகளாய் நீ வேண்டும் என்பதே என் விருப்பம்
தாயாகத் தாய்வீடு சென்று விட்டாய்.
தனியே இன்றிவனை விட்டு விட்டாய்.

படுக்கையில் நானே தொலைந்து போனேன்.
நடு இரவில் நட்சத்திரங்கள் எண்ணுகின்றேன்.
பெருவெள்ளத்தோடு போய்விட்ட சிறுகுடிலென
சிறுவுள்ளம் உடைந்து நினைவுகளில் மிதந்து நின்றேன்.

கண்ணயர்ந்தால் கனவில் வருவாயென்ற
நம்பிக்கையில் கண் மூடினேன் நான்,
கசிந்த கண்ணீர்த் துளியின் சூடு சொன்னது
பிரிவுத் துயர் பெரும் நெருப்பென்று!

2 comments:

said...

உயிருக்குயிராய் மனைவியை நேசிக்கும் ஒரு கணவனின் உள் மனதை வரிகளாய் மாற்றி கவிதையாய் தந்து விட்டீர்கள்!வாழ்த்துக்கள் நண்பா!

said...

மிக்க நன்றி நண்பரே

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal