என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, October 16, 2008

காதல், கானகம் - பகுதி 12

வாருங்கள் அத்தை, நீங்களும்
உண்ணுங்கள் என்றாள்.

நீங்கள் உண்ட பிறகு
நானுண்பேன்.
வீடு திரும்பும் நேரம் எப்பொழுதோ!
வயிறாற சாப்பிடுங்கள்.

அத்தான், இந்த பழக்கம் எதனால்
அரும்பியதென்று தெரியுமா உங்களுக்கு?

தெரியும் ஆதவளே!
தெளிவிக்கிறேன் கேள்.
சமையலைச் சுவையாய் செய்வதைவிட,
சமயமறிந்து இடுவதிலும் சிறப்பு இருக்கிறது.
கொடுப்பது பழைய கஞ்சியானாலும்,
கூட எது சேர்த்தால் சுவையென்று கணக்கிருக்கிறது.
முதலில் எதை உண்ன வேண்டும்,
எவையில் எவை சேர வேண்டுமென்பது கலை.
அவைகள் கலையை
அறிந்தவர்களுக்கே தெரியும்.

என்னே வியப்பு!
எண்ணிக்கையில்லாத சம்பிரதாயங்கள்
வியந்தாள் ஆதவள்!

ஆம்.
அறிவில் சிறந்த பல
கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் - ஆனாலும்
காரணமறிந்து செய்வதே சிறப்பு.
அழகிய நெல் வயலான சம்பிரதாயங்களிடையே
ஆங்காங்கே களைகளும் இருக்கும்.

என்ன களைகண்டீர்?
எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!

கை கழுவு,
காலாற நடப்போம்.
போகின்ற வழியில்
போதியவற்றை சொல்கின்றேன்.

மகிழ்வுந்து எடுத்துப்போ!
மழை பொழியுமாறு இருக்கிறது.
மெதுவாகச் செல்,
தெருவிளக்குகள் எரியுமுன் வந்துவிடு
என்றார் நாகய்யன்.

ஆகட்டும் தந்தையே.
அப்படியே செய்கிறேன்.

எங்கு வரை செல்கிறாய்
என்றாள் மலர்.

அருகிலுள்ள பூங்காவிற்கு என்று
கண் மறைத்துப் பதில் சொன்னான் காதல்.

மகிழ்வுந்து முன் கதவு திறந்து
மெல்லியவளை அமரச் செய்தான்.
புறப்பட ஆயத்தமானான்.

பாதுகாப்புப் பட்டையை அனிந்து கொள்ளுங்கள்,
பதைத்தான் நாகய்யன்.

பக்குவமாய் சென்று,
பத்திரமாய் திரும்புங்கள்,
பாசமுரைத்தாள் மலர்.

களிமுகம் செய்தான்,
கன்னியிடம், செல்லலாமா? என்றான்.
மகிழ்ச்சி வெள்ளத்தில், புன்சிரிப்போடு
ம்...ம்.... என்றாள்.
புறப்பட்டது மகிழ்வுந்து!


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

2 comments:

said...

/சமையலைச் சுவையாய் செய்வதைவிட,
சமயமறிந்து இடுவதிலும் சிறப்பு இருக்கிறது.
கொடுப்பது பழைய கஞ்சியானாலும்,
கூட எது சேர்த்தால் சுவையென்று கணக்கிருக்கிறது.
முதலில் எதை உண்ன வேண்டும்,
எவையில் எவை சேர வேண்டுமென்பது கலை.
அவைகள் கலையை
அறிந்தவர்களுக்கே தெரியும்./

அருமை

said...

தொடர்ந்து வாசித்து வருவதிற்கு நன்றிகள் பல.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal