என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, October 7, 2008

காதல், கானகம் - பகுதி 5

காதல் என்றாலே
கற்பனை ஊற்று
பொங்கி விடுகிறது உங்களுக்கு.

உண்மை.
காதலின்றி எது இயங்கும்?
சூரியனின் மேல்
சூழ்ந்திருக்கும் காதலால்தான்
கிரகங்கள் சுற்றுகின்றன.
உலகின் மீது
நிலா கொண்ட காதலால்தான்
நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.
தேன் மீதுள்ள
வண்டின் காதலால்தான்
மகரந்தச் சேர்க்கை.

அறிவியல் சொன்னால்
நியூட்ரான் மீது
ப்ரோட்டானும்
எலக்ட்ரானும்
கொண்ட காதல்தான்
அணு.

காதல் என்பது
உண்மையில்
உடம்பில் ஏற்படும்
இரசாயன மாற்றம்.

எல்லாமே
இரசாயன மாற்றம்தானா?
ஏன் இவ்வளவு
தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
பொய்யாக கடிந்து கொண்டாள்.

அருகில் வந்தாள்
அணைத்தாள்
கன்னத்தில் சிறிது நேரம் உதடொட்டி
கனிமுத்தம் கொடுத்தாள் பின்
தோள்களில் சாய்ந்துகொண்டாள்.

அதற்குள் ஏன்
நிறுத்திவிட்டாய்?
கண்ணே!
கணக்கிலடங்கா
பரிசுப் பொருட்களெல்லாம்
பெரிதல்ல ஒரு
முத்தத்தை கொடுக்கும்பொழுது.

அப்பாடா,
அறிவியல் விட்டு
வெளிவந்தீர்களா!

இல்லை
அறிவியல் தான்
வாழ்க்கை.
வாழ்க்கையை விட்டுவிட்டு
வாழ்வதெப்படி?

நீ கொடுத்த
அன்பு முத்தத்தின்
அறிவியல் அறிவாயா?
சொல்கிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

2 comments:

said...

/காதலின்றி எது இயங்கும்?
சூரியனின் மேல்
சூழ்ந்திருக்கும் காதலால்தான்
கிரகங்கள் சுற்றுகின்றன.
உலகின் மீது
நிலா கொண்ட காதலால்தான்
நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.
தேன் மீதுள்ள
வண்டின் காதலால்தான்
மகரந்தச் சேர்க்கை.

அறிவியல் சொன்னால்
நியூட்ரான் மீது
ப்ரோட்டானும்
எலக்ட்ரானும்
கொண்ட காதல்தான்
அணு./

இனிமை

said...

தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal