என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, October 29, 2008

காதல், கானகம் - பகுதி 21

உங்க மனசு யாருக்கும் வராது,
நீங்க எதுவும் தயங்காம சொல்லுங்க.

நேற்று இரவு
மருத்துவமனை சட்டத்திற்காக என்னிடம்
கையெழுத்து கேட்டார்கள் - நீங்கள் அவர்
கணவரா, சட்டென்று கையெழுத்திடுங்கள் என்று
வெள்ளை உடையில் வந்த தந்தி போல் ஒப்பித்தார்கள்
வழியேதும் தோன்றாமல்
கணவனென்று கையொப்பமிட்டு விட்டேன்
மன்னித்து விடுங்கள்.

பரவாயில்லைங்க,
பல நேரத்தில் இப்படித்தான்
நீங்க தாமதிச்சுருந்தீங்கன்னா என்னாயிருக்குமோ?
நீங்க வருத்தப்பட இதுல ஒன்னுமில்லை.

நான் சொன்ன வார்த்தை கேட்டு
நெஞ்சோரம் ஒரு புன்னகை செய்தாய்.

நீங்க செய்த உதவிக்கு
நாங்க ஏதாவது செய்யணும்.
கண்டிப்பா வீட்டுக்கு வாங்க - என்
கண்ணும், மனசும் குளிர உங்களுக்கு
எங்க வீட்ல விருந்து வைக்கணும்
என அன்புக் கட்டளையிட்டாள்.

ஒரு வாரம் கழித்து.
ஒருவரிடமும் சொல்லமலேயே
உன் வீடு வந்தேன்
என் வரவு சாதரணமாகவே இருக்கட்டுமென்று.

வாங்க, வாங்க
எப்படி இருக்கீங்க என்றாய்.
உனது பெற்றோர் எங்கே என்றேன்.
உங்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்களென்றாய்.
ஏன் என்றேன் - சொல்வதற்கு முன்
எனது கேள்விக்கு பதில் சொல்லுங்களென்றாய்.

எதுவும் புரியாதவனாய்
எது உனது கேள்வியென்றேன்.

எந்தன் வாழ்க்கைக்கு
நீங்கள் துணையாக இருக்க வேண்டும்
உங்கள் வீட்டில்
நான் விளக்கேற்ற வேண்டும் என்றாய்.

எதிர்பாரமல் வருவதுதான் காதல்
என கேள்விப் பட்டது
சத்தியமான உண்மையென உணர்ந்தேன்.
சில நாள் முன்புதான் பார்த்தோம்,
இன்னும் பழகவில்லை
இன்று கல்யாணம் என்கிறாயே என்றேன்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal