என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, October 28, 2008

காதல், கானகம் - பகுதி 20

மறுநாள் சரிசெய்யப்பட்ட உன்
மகிழ்வுந்துடன் வந்தேன்.
வாருங்கள் என்றார் தந்தை
யாருமில்லாத நேரத்தில்
பெரும் உதவி செய்தீர்.

உணவு எடுத்து வர கமலம்
வீடு சென்று இருக்கிறாள்,
நான் மருந்து வாங்கி வருகிறேன்
என் மகள் நினைவு திரும்பி இருக்கிறாள்
அவள் உங்களைப் பார்க்க வேண்டுமென்றாள்
அமர்ந்து பேசுங்கள், இதோ வந்துவிடுகிறேன்.

துவைத்து உலர வைத்த
துணி போல் இருந்தாய்
கடிதம் பிழையென
கசக்கி எறியப்பட்ட காதல் கடிதமாய்
துவண்டு கிடந்தாய்.
தூரம் நின்றேன்.

மெல்ல தலை அசைத்து
மெல்லியதாய் வாய் திறந்து
வாருங்கள் என்றாய்.

எப்படி இருக்கிறாய்
என்ற கேள்வியுடன்
வாங்கி வந்த பழங்களை
மேசையில் வைத்தேன்.

மழை முடிந்த வானமாய்
தூறலில் நனைந்த மலராய்
மெல்ல மலர்ந்து,
முகம் ஒளி பெற்றது.

நன்றி என்றாய்.
நேற்றே ஓராயிரம் முறை
உன் பெற்றோர்கள்
உரைத்து விட்டனர்.
உடம்பு தேறியிருக்காவென்றேன்.

இன்னும் இரண்டு நாளில்
இல்லம் போகலாம்
என்று சொன்னார்களென்றாய்.

மகிழ்ச்சியான செய்தி,
மனது ஆறுதல் அடைந்தேன்.

நன்றிப்பா
நான் வணங்கும் தெய்வம்போல்
வந்து அவளை காப்பாத்திட்ட.
இந்தக் கடனை என்ன செஞ்சு
தீர்க்கப் போகிறேனென உன்
தந்தை உள்ளே நுழைந்தார்.

மனிதம் எஞ்சியிருக்கிற
மனிதன் செய்யும் காரியம்தான்.
இத்தனை பாராட்டுகள்
அவசியமென்று தோன்றவில்லை.

மகிழ்வுந்து சரி செய்து
மருத்துவமனை வாசலில் நிறுத்தியிருக்கேன்.
இன்னொரு சேதி சொல்லணும் என்ற நேரம்
இடையே உன் தாயும் வந்தார்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]

2 comments:

said...

/மனிதம் எஞ்சியிருக்கிற
மனிதன் செய்யும் காரியம்தான்.
இத்தனை பாராட்டுகள்/

உண்மைதான்

said...

தொடர்ந்து வாசித்து வருவதிற்கு நன்றிகள் பல.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal