என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, October 14, 2008

காதல், கானகம் - பகுதி 10

கல்வி என்பது
முடிவிலாதது,
கற்பதற்காக நேரத்தை
விற்பதில்தான் இருக்கிறது
வியாபாரம்.

உலகம் காண செல்கின்றோம்,
வீட்டு சன்னல் வழியாக இவள்
வாசித்த வாழ்க்கையை,
வாழ்வின் வாசலுக்கு கொண்டு சென்று
அறிவுபெற
அழைத்துச் செல்கிறேன்.

மாங்கனி போல சுவையாய் பேசும் என்
மருமகளுக்கு மதி குறைவு என்கிறாயா?
வந்தாலே வீட்டை ஒளிரச் செய்பவளுக்கு
வாழ்க்கையைக் காட்டப் போகிறாயா?

மதி என்ற பெயரையே
மாற்றச் சொல்லிவிட்டார்
உங்கள் மகன்.
இனி மற்றது பேசி எதற்கு?

சரி, ஆகட்டும்.
ஆகாரம் உண்டு
பிறகு செல் என்றார்.

செவிக்கும் கண்ணுக்கும் உணவு தேடிச்
சென்று கொண்டிருக்கிறோம்.
வயிற்றுக்கு உணவு
வேண்டுமெனில் வந்துவிடுகிறோம்
வீட்டிற்கு என்றான் காதல்.

மதி, நீ
சாப்பிட்டு விட்டுப்போம்மா.
அவன் பசி பொறுப்பான்,
அகிலமே உணவென்பான்,
மழை நனைவான்,
வெயில் சுமப்பான்,
உலகே குடையென்பான்.

வீட்டிற்கு வந்த உன்னை
வெறும் வயிற்றோடு அனுப்ப மாட்டேன்.
அன்னம் பருகிக் கொள், பின்
அனைத்தும் தெரிந்து கொள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal