என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, October 13, 2008

காதல், கானகம் - பகுதி 9

ஊர்காண எங்கள் திருமணமானதும்
உங்கள் கடன் முடிந்தது.
உணவுப் பந்தி முடிந்ததும்
உறவினர்கள் பணி முடிந்தது.
அன்றுதான் எங்கள் பணி
ஆரம்பம் ஆகிறது.

இதில்
பயணிக்கத் தெரியாததில்
பாதி பேர்
வாழ்க்கையை
இரத்து செய்கிறார்கள்
மீதி பேர்
இன்பங்களை
இரத்து செய்கிறார்கள்.

கால் கடுக்க நடக்கப் போகும்
கரடுமுரடான வாழ்க்கைக்கு
காலணிகள் வாங்கச் செல்கின்றோம்.

காலமென்னும ஆழி
கடக்க படகென்னும்
அனுபவம் வேண்டும்
அதற்கான மரம்
தேடச்செல்கின்றோம்.

அனுபவம் நீ கடக்கும்
ஆண்டு பொருத்து அமைவது.
ஒரே நாளில்
அனைத்து அறிவும் பெறுவது
அணுவளவும் நடக்காது
என அனுபவத்தில்
எடுத்துரைத்தார் நாகய்யன்.

அனுபவம் என்பது
அளவிட முடியாத தீ அல்ல,
அது ஒரு சுடர்.

புத்தனுக்கு
போதி மரத்தில் வந்தது
விவேகானந்தனுக்கு
பரமஹம்சரிடம் வந்தது.

உண்மை, நியாயம் என்பது
உள்ளத்தில் நமக்கிருக்கும்
அளவு கோல் பொருத்தது.
அது சரியானதாதுதான்
என எண்ணுவதுதான்
எளிதில் கிடைக்கும் தீர்வு - ஆனால்
சரியான அளவுகோலைத் தேடிச்
செல்வதுதான் சிறப்பு.

பிடிவாதம் என்பதையே
பழக்கமாகக் கொண்டிருக்கிறாய்.

ஏன், எதற்கு என
கேள்வி கேட்பதற்கும்
இடம், பொருள், ஏவல்
இருக்கிறது.

நில்லென உன்னைத்
தடுக்கவில்லை,
நீ அறியாதது அல்ல,
இனியும் என்ன அறியப் போகிறாய்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

2 comments:

said...

/உண்மை, நியாயம் என்பது
உள்ளத்தில் நமக்கிருக்கும்
அளவு கோல் பொருத்தது.
அது சரியானதாதுதான்
என எண்ணுவதுதான்
எளிதில் கிடைக்கும் தீர்வு - ஆனால்
சரியான அளவுகோலைத் தேடிச்
செல்வதுதான் சிறப்பு./

அருமையான வரிகள்

தொடருங்கள்

said...

தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal