என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, October 6, 2008

காதல், கானகம் - பகுதி 4

ஆதிக்கு துணையில்லை
அது பெருகிப் பிரியும்,
பிரிந்து பெருகும்,
புணர்ந்து மாறும்,
மாறிப் புணரும்.

புரியவில்லை,
பெருகியது என்றால், ஒன்றிலிருந்து
எங்கனம் இத்தனை உயிர்கள் வந்தது?

சொல்கிறேன் கேள்.
பத்தில் ஐந்து கழிந்தால், மீதம் ஐந்து.
ஆனால் ஏழு கழிந்தால் மீதம் மூன்று.
இது போன்று கழிந்தும், பின்
புணர்ந்தும், பிரிந்தும், பெருகியும்
விளைந்ததுதான் உயிர்கள்.
புரிந்ததா?

புரிவது போல் இருந்தாலும்,
புரியாதது போலும் தோன்றுகிறது.
அறிவியலை உங்களோடு நிறுத்துங்கள்,
ஆண்டவன் என்று கூறினால்தான்
எனக்கு சட்டென்று புரியும்.

பேதையே,
நீ கூறும் கடவுளின் உட்பொருள்தான்
நான் கூறும் துளிகள்.

..ம்.....ம் போதும், போதும் - என்னைக்
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு
காதல் என்று நீங்கள்
பெயர்மாற்றிக் கொண்டது போல்,
மதியை ஆதவள் என
மாற்றிக் கொள்கிறேன், போதுமா?

ஆம். அதுதான் சரி,
திருமணம் என்பது
தித்திக்கும் புதுவாழ்வு.
புதுப்பெயர் சூட்டிக் கொள்வதில்
புதிர் என்ன இருக்கிறது?

காதல், காதல் என்று எத்தனையோ
காவியங்கள் வந்தும், காதலென்ற
பெயரை அவனியில் யாருமே வைத்ததில்லை.
நீங்கள்தான் வைத்திருக்கிறீர்கள்.

அதில் ஒரு சிறப்பு கேள்,
காதல் எனும் வார்த்தை
களம் கண்டு மாறுபடும் - ஆனால்
உணர்வு வழியே ஒன்றுபடும்.
பெற்றோர் பிள்ளையிடம் பேசுவதும் அதுவே,
சகோதரத்துவத்தில் சிறப்பதும் அதுவே,
நட்பிலே நனைவதும் அதுவே,
மணத்தில் மனப்பதும் அதுவே.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

2 comments:

said...

/பத்தில் ஐந்து கழிந்தால், மீதம் ஐந்து.
ஆனால் ஏழு கழிந்தால் மீதம் மூன்று.
இது போன்று கழிந்தும், பின்
புணர்ந்தும், பிரிந்தும், பெருகியும்
விளைந்ததுதான் உயிர்கள்.
புரிந்ததா?

புரிவது போல் இருந்தாலும்,
புரியாதது போலும் தோன்றுகிறது.
அறிவியலை உங்களோடு நிறுத்துங்கள்,
ஆண்டவன் என்று கூறினால்தான்
எனக்கு சட்டென்று புரியும்.

பேதையே,
நீ கூறும் கடவுளின் உட்பொருள்தான்
நான் கூறும் துளிகள்./

/காதல் எனும் வார்த்தை
களம் கண்டு மாறுபடும் - ஆனால்
உணர்வு வழியே ஒன்றுபடும்.
பெற்றோர் பிள்ளையிடம் பேசுவதும் அதுவே,
சகோதரத்துவத்தில் சிறப்பதும் அதுவே,
நட்பிலே நனைவதும் அதுவே,
மணத்தில் மனப்பதும் அதுவே./

அருமை

said...

தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal