என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, October 30, 2008

காதல், கானகம் - பகுதி 22

அடர்ந்த காட்டினிலிருந்து
என் உயிர் காத்தீர்,
கணவனென கையொப்பமிட்டீர்
கடலினும் ஆழமான உங்கள்
அன்பினால் என்னை மயக்கிவிட்டீர்.
யாரையோ மணக்கப் போவது நிச்சயம்,
யாரோ என்பவர் நீங்களாக இருக்கக்
கூடாதாவென கேட்டாய்.

உதவி என்பது பலனை
எதிர்பார்த்து செய்வதல்ல
உதவுவது என் குணம்,
உன்னிடமும் அவ்வாறேயென்றேன்.

நீங்கள் இதுவரை செய்த உதவிகளுக்கு
நீண்ட பலனாக இறைவன்
என்னை உங்களுக்குக் கொடுத்தானென
எண்ணிக் கொள்ளுங்களென்றாய்.

பதில் சொல்ல வந்த வார்த்தைகளை
பாதியிலேயே விழுங்கிவிட்டேன்.

பையிலுள்ள அலைபேசி அழைத்தது.

பார்த்தீர்களா நான் சொல்வது
பூராவும் உண்மையென
மணியோசை கேட்கிறது.

இது உன் கற்பனை
இதுதான் உண்மையென இப்பொழுது
புரிந்து விடும் பார்.

பெரிய புன்னகையோடு வந்த அம்மாவின் குரல்
பெண் கொடுக்க வந்திருக்கிறார்கள்,
இதுதான் விவரமென்றாள்.
இதில் சம்மதமா உனக்கென்றாள்

சற்றே குழம்பிப் போனேன்,
சிரித்த உன் முகம் கண்டேன்
கோடிக்குழப்பம் கொண்ட
பிரபஞ்சம் போன்ற உன் கண்கள் பார்த்தேன்.
ஒரு நொடி மூர்ச்சையானேன்
மரு வினாடியே தெளிந்தேன்.

சரியென்று சம்மதம் சொன்னேன்.
சாதகப் படி இரண்டாண்டிற்கு
பிறகுதான் மணமுடிக்க வேண்டுமென்றார்கள்.
போகட்டும் அதுவரை காதலிக்கிறேனென்றேன்.
முதன் முதலாய் எனக்குள்
முளைத்த வெட்கம் மறைக்க
எண்ணி, அது முடியாமல்
ஏமாந்தவனாய், சிறு புன்னகை செய்தேன்.

இப்படி
நான் செய்த சிறு உதவிக்கே என்மீது
நேசம் கொண்டாயே கண்ணே,
பூமியென்னும் உயிர் கொடுத்த தாயின்மீது
பாசமெப்படி மறந்தாய்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal