என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, October 22, 2008

காதல், கானகம் - பகுதி 16

சமாதானம் வேண்டாம்,
சட்டென மகிழ்வுந்தை நிறுத்துங்கள்.
எனக்கு அழுகையே வருகிறது.

வாகனம் நிறுத்தினான்,
வாரியணைத்தான் அவளை.
மெல்ல என்னைப் பார் என்றான்.

மவுனம் மட்டுமே திருப்பிக் கொடுத்தாள்.

அவள் கூந்தல் கோதினான்.
அடர்ந்த விழிகளால் பார்த்தாள்.

தண்ணீரில் தான்
மீன்கள் வாழுமென்பதை
கண்ணீரில் மிதக்கும்
உன் கண்கள் சொல்லுதடி.
அடியே கார்மேகக் கூந்தல்காரி
அவனியில் கானகம்தான் நம் முதல் வீடு.
கருங்கூந்தல் காடு கொண்டவளே
காடு கண்டா அஞ்சுகிறாய்?

புறா போல் தலை திருப்பினாள்
புறமுதுகு காட்டினாள்.
உங்களோடு சண்டை என்றாள்
ஊடல் கூட்டினாள்.

தோள் பிடித்தான்
தேகம் திருப்ப எண்ணினான்.

அவளுக்கு
சமாதானத்தின் சுகம் பிடித்தது
சடுகுடு ஆடியது மனது.

திருப்ப முடியாமல் தோற்று
முதுகில் முகம் புதைத்தான்.
மெல்லியதோர் மூச்சு விட்டான்.

உனது முதுகு போன்ற
உன்னத பளிங்குகள் காணலாம்,
அகன்ற உன் கூந்தல் போன்ற
அடர்ந்த கானகம் காணலாம்,
மலையில் அருவி காணலாம்,
மலை முகடுகள் ஏறலாம்,
பசிக்கு பழங்கள் உண்ணலாம்.
பள்ளங்கள் தாவலாம்,
ஆடைகள் கூட
அவசியமில்லாத இருள் காணலாம்,
சுதந்திரம் வாசிக்கலாம்.

தனிமையிலே நான் இருந்ததில்லை
ருதுவானதும் இட்ட இரும்பு வளையத்தை
இன்னும் களையவில்லை.
தனிமை பயம் எனக்கு,
அடர்ந்த காடு பயம் எனக்கு.
அவன் மடி புகுந்தாள்.

கன்னம் தடவினான்
காது மடல் நீவினான்
மூக்கில் மூக்குரசினான்
மேல் நெற்றியில் முத்தமிட்டான்
செவ்விதழ் சீண்டினான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal