என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, October 7, 2008

வாழ்வு சிறக்கட்டுமெங்கும்!

ஒரு தலைவன் பொங்கி எழும்பொழுது... இது ஒரு பாடலாய்...

கண்கள் தீப்பிடிக்க
கைகள் வாள்பிடிக்க
கொடுமை அழித்துவிடு வீரா
எங்கள் குறைதீர்க்க
ஏழை நலம் பெருக்க
எதிரிகளை வேரரறுக்க வாடா

எழுவாய் இடி இடிக்க
நடப்பாய் வெடி வெடிக்க
உன் சத்தம் பிளக்கட்டும் வானை

எதிரிகள் தொடை நடுங்க
அவர்கள் படை ஒடுங்க
இந்த யுத்தம் முடியட்டும் நாளை

மக்கள் பலமுண்டு
அவர்கள் அன்புண்டு
தொடர்ந்திடு உன் போரை
நித்தம் உணவுண்டு
நல்ல உடையுண்டு
விடிந்திடுமே நம் வாழ்க்கை

நிற்பாய் நிலம் அதிர
வெல்வாய் வான் ஒளிர
உன் வெற்றி ஒலிக்கட்டுமெங்கும்

ஆணை இடுவாய் விடிய
கொள்கை எடுப்பாய் அடைய
நம் வாழ்வு சிறக்கட்டுமெங்கும்!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal