என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, October 3, 2008

காதல், கானகம் - பகுதி 3

காலைச் சூரியனின்
குவளை வெளிச்சத்திலும்
வெளிச்சம் பரவாத அறையின்
வாயில் திறந்தான்.

செவ்வான மேகம் போல
செவ்விதழில் கோபம்.
இளஞ்சூரியனின் வெப்பமொத்து
இசைப்பது போலவே கேட்டாள்
"இவ்வளவு நேரம் ஏன்?".

அடியேய்,
மதி நீ இல்லாமல் போனதால்,
மதியின்றிப் போனேன்.
சாவித் துவராம்
வழியே வந்த உன் மதி கொண்டுதான்
வாயில் திறக்க வந்தேன்.

காதல், காதல் என்று கூப்பிட்டது
காதில் விழவில்லையா?

இன்னும் சற்று நேரம் நீ கூப்பிடுவாயென்று
எண்ணியே சிலையாய் இருந்தேன்.

ஆரம்பித்து விட்டீர்கள்!
என்று கூறி உள்ளே வந்தவள்,
நீங்கள் பித்து பிடித்து போயிருக்கிறீர்கள்,
மதி அழைப்பதும் புரியாத வண்ணம்
மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்றாள்.

மதி என்று உனக்கு யாரடி
பெயர் வைத்தது?

பெண், சூரியன்.
பல காலமாய் வந்தாலும்
ஒவ்வொரு வருகையும்
ஒரு வரம்தானடி.
பெண்ணே
நீ பேசும் பொழுது
இளஞ் சூரியன்,
கோபம் கொண்டால்
பக்கச் சூரியன்,
காதல் கொண்டால்
மாலைச் சூரியன்.

ஆண்
பூமி போன்றவன்.
பெண் இருக்கும் இடத்தில்
அன்பு வெளிச்சத்தில்,
தழைத்து வாழ்கின்றான்.
தான் பெறும்
வெற்றியிலும், தோல்வியிலும்
பின்னாலும், முன்னாலும்
பெண்ணை வைத்துக் கொள்கிறான்

மேலும் கேள்,
சூரியனிலிருந்து பிறந்ததுதான் பூமி
பூமியிலிருந்து பிரிந்ததுதான் நிலா

சிறிது நிறுத்துங்கள். அப்படியானால்
சூரியனின் துணைவன் யார்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

2 comments:

said...

நன்றாக இருக்கிறது

said...

மிக்க நன்றி உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal