என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, October 27, 2008

சாளரம் தாண்டா கைகள்

உனது கைரேகையும்
எனது கைரேகையும்
ஒன்றாய்ப் படிந்த
கர்பப்பை அழிந்திருக்கிறது
கால வெள்ளத்தாலும்
கரை பிரிக்கும் கடலாலும்!

குருதியோடும் தசையோடும்
கலந்துவிட்ட உணர்வுகளும்
தொப்புள்கொடி உறவுகளும்
கலையவில்லை இன்னும்,
உனக்கொன்று நேரும்போது
கொதிக்கிறது எனது எண்ணம்!

தும்மினாலும் நீ விம்மினாலும்
எம்மையெட்டிவிடும் அச்சத்தம்
நொந்ததாலும் ஆங்கே
நின்விரல்கள் வெந்ததாலும்
உன்வீட்டில் பெரும் யுத்தம்
என்னெஞ்சினில் பல சத்தம்!

தெரிந்தும் தெரியாமலும்
நாமறிந்தும் அறியாமலும்
உடைத்துவிட்ட கண்ணாடிகள்
ஒட்டாமலின்னும் இருப்பினும்
ஓயாமல் அதில் தெரிகிறது
நம் பிம்பம்!

கண்ணாடிகளின் விரிசலில்
கச்சிதாமய்ப் படிந்திருக்கிறது
சில கிருமிகளும்
பலகால எச்சங்களாய்ப்
படிந்திருக்கும் தூசிகளும்
அதில் ஒளிந்திருக்கும் பாம்புகளும்!

உன்வீட்டு வாசல்தாண்டி
என்வீட்டு சாளரம்முன்
சிந்துகின்ற உனது குருதியில்
வெந்துமுடிக்காத உன்னிதயத்துண்டுகளும்
வந்தே விழுகின்றது
என்னால் அழமட்டுமே முடிகிறது!

நீ வென்றால்
நான் ஆர்ப்பரிப்பேன்
நீ தோற்றால்
நான் அழுதுறைவேன்
சூழ்நிலைக்காக மன்னிப்பாயென்
சாளரம் தாண்டா கைகளை!

1 comments:

said...

மிக அருமையான கவிதை நண்பா! நெஞ்சை உருக்கும் வரிகள் ஒவ்வொன்றும்! அருமையாக வடித்திருக்கிறீர்கள்!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal