என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, October 21, 2008

காதல், கானகம் - பகுதி 15

ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு மொழி,
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன்,
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கோட்பாடு.
அஃதே தோன்றியது முதல் மதம்.

மருத்துவம் மலரச் செய்தான்
மாபெரும் ஆராய்ச்சி செய்தான்,
வானம் பார்த்தான்
வானவியல் பயின்றான்,
கணிதம் இயற்றினான்
வணிகம் செய்தான்.

பிள்ளைக்கு விலங்கு
பயம் காட்டி உணவளித்தான்,
கனத்த ஆராய்ச்சிகளை
கதை கதையாய் சொன்னான் - இவைகளை
பின்பற்றச் சொன்னான், நம்பாதோர்க்கு
பிசாசு, பூதம் என பயம் காட்டினான்.
நெல் அறுவடை செய்தான்,
நாகரீகம் வளர்த்தான்.
போர் செய்து நிலங்களை கூட்டினான்
பண்பாடு கண்டான்.

போதும், போதும்
பிரளயம் கண்டது போலானாது
என பிரம்மித்தாள் ஆதவள்.

பூங்கா செல்லலாம் என்று
பாதை மாறிச் செல்கிறீர்கள்,
நாம் எங்கே செல்கிறோம்? - இல்லை
நீங்கள் எங்கே அழைத்துப் போகிறீர்கள்?

பொறு, பொறு
புலம்பாதே!
நாம் பூங்கா கடந்து
நாற்பது நிமிடம் ஆயிற்று.
கானகம் செல்கின்றோம்.

வேண்டாம்.
வீட்டிற்கே சென்றுவிடலாம்
என்றவளது கண்களில்
இருண்ட கானகத்தின் பயம் தெரிந்தது.

பூகம்பம் உணர்ந்த பாம்பைப்போல் ஏன்
பயப்படுகிறாய். நானிருக்கிறேன், அஞ்சாதே!

இரண்டு வாரத்தில் திருமணம்
இப்படிச் செல்வது நல்லதல்ல.
அது ஆள் அற்ற காடு
அங்கே பேய் இருப்பதாக
பலர் கூறி கேட்டிருக்கிறேன்
பயந்து சிவந்தது அவள் முகம்.

பேயா?
பேயென்னும் மூட மாயை
உன்னையும் தொற்றிக் கொண்டதா?
உண்மையைக் கூறுகிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal