என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, October 24, 2008

காதல், கானகம் - பகுதி 18

கடல் முதல் உயிர் தரித்தது,
காற்றைத் திருப்பி பருவ மழை
பெய்ய மலை உதவியது.
காடு மானுடம் வளர்த்தது.

காடுகளின் சமாதிதான் நகரம்,
காடு சார்ந்தே நகர் அமைத்தான்
பின் காட்டைக் கொன்றான்.
வீட்டுக்கோர் மரம் வளர்த்தான்
வழிமாறி இன்று மரணம் வளர்க்கின்றான்.

நிமிர்ந்து பார்த்தாள்
நகரம்தான் சுகம் என்றாள்.
விலங்கு பயம் இல்லையென்றாள்,
வீதியெங்கும் மனிதன் என்றாள்.
இதில் எங்கே மரணம் வளர்க்கிறான்?

உனக்கு விஞ்ஞானம் மறந்ததோ?
உணர்த்துகிறேன் கேள்.
நாம் கண்ட விஞ்ஞானத்தில் ஏராளம்
நாசுக்காக ஓசோனை
ஓட்டையிட்டுக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நகரத்தின் அருகிலும்
ஒரு காடு வேண்டும்,
மரங்களின் கொலைகளால்
மாபெரும் பருவ மாற்றம் ஏற்படுகிறது.
பருவம் தவறிய மழையால்
பயிர்கள் ஆகிறது கொலை.
வரண்டு போன ஆறுகள் - அதிலும்
வஞ்சகம் இல்லாமல் தொழிற்சாலை
கலக்கும் கழிவுகள், இதனால்
கலப்படமானது குடிதண்ணீர்.
ஆழக் குழி தோண்டி
அடி வரை குழாய் இட்டு
நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள், இதனால்
நீர்த்தடம் மாறி, நிலச்சரிவு ஏற்படும் அபாயங்கள்.

உலகமும், உயிர்களும் தானே பிறந்தவை - ஆனால்
உறுதியாய் அழியப் போவதென்னவோ மனிதனால்தான்!

நடப்பதன்று பார்த்துக் கொள்ளலாம்,
நமக்கொன்றும் நிச்சயம் நடக்காதென்று
ஏமாற்றம் கலந்த ஏளனச் சிரிப்பில் சொன்னாள்.

தவறாக பேசிவிட்டோமோவென்று
கருதி மன்னியுங்கள் எனக்
கூற வாயெடுத்தாள்.
பலனில்லை, புறப்பட்டு விட்டது
காதலின் வார்த்தைகள்.

பாவையே மறந்தாயோ மானுடத்தை?
பலர் பலன் பெற நட்ட மாமரம்
நட்டவருக்கு மட்டுமே பலன் தருவதில்லை,
நாளை என்பதை எண்ணாத
மனிதனால் நன்மை விளைவதில்லை
ஒறுமுறை நினைவு கூறுகிறேன் கேள்...


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

2 comments:

said...

/காடுகளின் சமாதிதான் நகரம்,
காடு சார்ந்தே நகர் அமைத்தான்
பின் காட்டைக் கொன்றான்.
வீட்டுக்கோர் மரம் வளர்த்தான்
வழிமாறி இன்று மரணம் வளர்க்கின்றான்.

நிமிர்ந்து பார்த்தாள்
நகரம்தான் சுகம் என்றாள்.
விலங்கு பயம் இல்லையென்றாள்,
வீதியெங்கும் மனிதன் என்றாள்.
இதில் எங்கே மரணம் வளர்க்கிறான்?

உனக்கு விஞ்ஞானம் மறந்ததோ?
உணர்த்துகிறேன் கேள்.
நாம் கண்ட விஞ்ஞானத்தில் ஏராளம்
நாசுக்காக ஓசோனை
ஓட்டையிட்டுக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நகரத்தின் அருகிலும்
ஒரு காடு வேண்டும்,
மரங்களின் கொலைகளால்
மாபெரும் பருவ மாற்றம் ஏற்படுகிறது.
பருவம் தவறிய மழையால்
பயிர்கள் ஆகிறது கொலை.
வரண்டு போன ஆறுகள் - அதிலும்
வஞ்சகம் இல்லாமல் தொழிற்சாலை
கலக்கும் கழிவுகள், இதனால்
கலப்படமானது குடிதண்ணீர்.
ஆழக் குழி தோண்டி
அடி வரை குழாய் இட்டு
நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள், இதனால்
நீர்த்தடம் மாறி, நிலச்சரிவு ஏற்படும் அபாயங்கள்.

உலகமும், உயிர்களும் தானே பிறந்தவை - ஆனால்
உறுதியாய் அழியப் போவதென்னவோ மனிதனால்தான்!
/

காதலில் கூட
கற்கால மனிதனாக மாறும்
அவலத்தை
அள்ளித்தொளிப்பது
அருமை

said...

தொடர்ந்து வாசித்து வருவதிற்கு நன்றிகள் பல.

உண்மையைச் சொன்னால், சமுதாயக் கருத்துகளைச் சொல்லத்தான் காதலையே உள்ளிழுத்தேன். :-)

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal