என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, July 30, 2008

விளக்கமறியா விளக்கங்கள்

பூவென்று நம்பி கையிலெடுத்ததில்
வண்டொன்றும் பூநாகமும்
தோன்றிச் சண்டையிட்டுக் கொண்டன!
வெள்ளை ரோஜாவிதழ்
மெல்ல மெல்ல சிவப்பாகின
நாளமுடைத்த குருதியினால்!

வழிந்த குருதியில்
புரிந்தது அதன்
வெப்பமும், வேட்கையும்.
தேனருந்த வந்த உங்களுக்கு
தேவையா இதுவென்றேன்.

வீசியெறிந்த அம்புகளை
திரும்பப் பெறமுடியாது
தன்னிலை விளக்கத்துக்குத் தாவின,
மீண்டும் அம்புகள் குமிந்தன!

அம்பு மழை முடிந்த பின்னர்
அமைதியானது இடம்
ரோஜா இதழில் மட்டும்
குருதி சிந்திய தடம்

என்றாவது அம்போடு
நானிருக்கையில் அன்போடு
எனைத் தடுக்க
வண்டும் பூநாகமும்
வருமென்ற நம்பிக்கையோடு நான்!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal