என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, July 11, 2008

மூன்று விரல்கள்

நண்பர்களின் தவறை
நேரம்தவறாமல் சுட்டிக்
காட்டிவிடும் எனது
கண்டிப்பான ஆள்காட்டி
விரல் திடீரென்று
குரல் எழுப்பியது.

"துலாவின் தன்மையோடு
துல்லியமாய் கட்டைவிரலும்
குற்றச்சாட்டுகளை சுமந்து
கொண்டு நிற்கும்
ஆள்காட்டி விரல் நானும்
அன்றி மீதம்
அனைத்துமே
உன்னை ஆராய
உன்னையே பார்த்து
நிற்கின்றதின் உண்மை
நிலை அறிவாயா?" என்றது.

யார் நீ?
யாவும் அறிந்தது போல்
என்னுள் இருந்து
என்னையே கேள்வி கேட்கிறாய்?

"நான் தர்ம தேவதை
நல்லவர்களுடன் தான் பேசுவேன்" என்றது

வாதத்தின் சாமர்த்தியத்தோடு
வழக்காடத் துணிந்துவிட்டேன்.
நான் நல்லவனெனில்
நீ ஏன் குற்றம் சுமத்துகிறாய்?

"ஊருக்கு நல்லதுகூறும்
உனையும் தூய்மையானவனாக்குவதே
என் எண்ணம்" என்றது

மேலும்...

"இயலாமையிலும் பொறாமை
இம்மியளவும் வந்ததில்லையா?
சின்னஞ்சிறிய விசயத்திற்கும்
சோகக்கண்ணீர் வடித்ததில்லையா?
உன் அவசர முடிவுகள்
உன்னுடனுள்ளோர்களைப் பாதித்ததில்லையா?
அன்பு இருந்தும் அவற்றை
அவர்களுடன் பகிர்ந்ததுண்டா?
குற்றம்சாட்டும் உனது கைகள்
களங்கமற்றதுதானா?" என்றது

வெட்கி நின்றேன்
வேதனைப் பட்டேன்
என்னைப் பற்றி நானே
உண்மையுரைப்பதை எப்படித் தடுப்பேன்
உதாரணப் புருஷனாகும் வரை?!

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal