என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Monday, July 21, 2008

நான் அவன் இல்லை

ஊறுகாய், கருவாடோடு
ஊரிலிருந்து வந்திறங்கினான்
உயர்பள்ளித் தோழன்.

"எங்க ஆத்தா, அய்யன்
உங்க அப்பனாத்தா
நம்ம ஆளுக அல்லாரும்
நீ நல்லா இருக்கியானு
நலம் விசாரிக்க சொன்னாக.

காலேசுல படிச்சு
வேலை கிடச்சு பட்டனம்
போனப் பொறவு ஊரு
பக்கம் ரெண்டு வருசம் வரலியப்பா

உனக்குப் புடிக்குமேனு
உங்க ஆத்தா
அதிரசமும் முறுக்கும்
ஆம வடையும் செஞ்சு
என்கிட்ட கொடுத்துவிட்டுருக்குடா"
என்றான் வெகுளித்தனமாக.

முக்கால் நீள கால்சட்டையோடும்
முடியில் ஆங்காங்கே
வண்ணத்தோடும்
வழிந்தோடும் எச்சில் போல்
உதட்டுக்குக் கீழே குறுந்தாடியோடும்
உண்மை அடையாளம் துறந்து
நாகரீகத்தின் வளர்ச்சியில்
நன்றாக மாறிப்போன நான்; அவனிடம்
"ஓ ஷிட், அப்படியா" என்றேன்.

"சார், நீங்க ஆர்டர்
செஞ்ச பிட்சா,
சிக்கன் பர்கர்" என்று
கதவு தட்டினான் பிட்சா
கார்னர் பையன்.

2 comments:

said...

இன்றைய வாழ்க்கை
அப்படிதான் உள்ளது
யாரும்
அவர்களாக இல்லை

அருமையான வரிகள்

said...

நன்றி திகழ்மிளிர்

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal