என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, July 1, 2008

பங்கு போடுங்கள்

என் விரல்களே
என் கண்களைக்
குத்தி நிற்கின்றன

என் குருதியாவும்
எங்கெங்கோ சிந்தி
தெரித்துச் சிதறுகின்றன

என் நிழல்களே
உடல்களை துரோக
வெயிலில் வாட்டுகின்றன

இதையெல்லாம் கண்டு
இகழ்ச்சியடையத்தான்
இன்னும் உயிர்
இந்த உடலில் ஒட்டியிருக்குதா?

சொத்துக்களைப் பிரிப்பதில்
சண்டையிடும் என் மக்களே
இறந்து விட்ட என் கணவரை
இடுகாடு வரையாவது
எடுத்துச் செல்லுங்கள்
என்னவருக்கு நானே
இடுகிறேன் கொள்ளி.

ஈன்ற இந்த
ஈனப்பிறவியின் வயிற்றையும்
பங்கு போட்டுவிட்டுப்
போய்விடுங்கள் அங்கேயே!

2 comments:

said...

உறுக்கமான கவிதை. சற்றே மனதை வறுத்தம் தொற்றிக் கொள்கிறது. கவிதை அருமை. வாழ்த்துக்கள்

said...

உண்மைதான் நண்பா, ஆனால் சில இடங்களில் நான் இது போன்ற தகராறுகளைக் கண்டதுண்டு.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal