என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Tuesday, July 22, 2008

தற்கொலை

கண்கள் அகலத்திறந்திருந்தும்
காட்சிகள் புலப்படவில்லை
புலிக் கூண்டுக்குள்
பசியோடு நானும் புலியும்
போராடுவது போலொரு உணர்வு
இறுதியில் மடியப் போவது
உறுதியாக நானென்ற எண்ணத்திலேயே
உடைந்து சிதறுகிறது நம்பிக்கை.

உலகமென்ன
வாழ்வென்ன
சொந்தமென்ன
பந்தமென்ன
யாரும் எனக்கில்லை
யாருக்கும் நான் தேவையில்லை

பள்ளமும் பாம்புகளும் நிறைந்த
பாதையிலே ஒற்றை வெளிச்சமுமின்றி
செல்வது போலதான் என்வாழ்வு
அடுத்த நிமிடம்
கேட்கப் படும் கேள்விகளுக்கு
பதிலெங்கே இருக்கிறது
பாவியென தூற்றப்படுவதற்கு முன்
என்ன செய்யலாம்?

"இனியும் நீ உயிர்வாழ்ந்து
என்ன செய்யப் போகிறாய்?"
கணீர் குரல் வந்தது
குரல்வளை வழியாக அது வரவில்லை.

ஆம்,
தற்கொலை!
இதுதான் ஒரே வழி.

என் வாழ்வின் முடிவே
இன்னதுதானா?
தற்கொலைக்கு அடுத்த
தருணம் பூமியிலே
நானில்லை...
தேவையா இது?

"பயந்தால் புண்ணியமில்லை
பேதையே, துணிந்து தூக்கிடு"
மிரட்டியது அந்தக் குரல்.

நான் கோழையல்ல
நிச்சயம் தூக்குதான் ஒரே வழி.
கயிறு இல்லையே?
உயிர் போக்க எதுவழி?
புடவை இருக்குமே, அம்மாவின்
புடவை.

"இன்னுமென்ன தயக்கம்
இறுக்கிக்கொள் கழுத்தை, குதித்துவிடு"
அழைத்தது அதே குரல்.

காலடியில் இருக்கும்
கட்டையைத் தட்டிவிடவா?
கண்ணீர் கரைபுரண்டோடுகிறதே
எனக்குப் பிடித்த பல
விசயங்கள் கண்முன் வருதே
ஆனால் அவமானத்திலிருந்து
அவைகளெதும் காப்பாற்றப் போவதில்லை.

காசு கொடுத்தது வீணாய்க்
கரைகிறது என்றாய்
எருமை, கழுதை
எதுக்கு நீயெல்லாம்
இருக்கிறாயென்றாய்
இரொண்டொரு முறை
எங்கேயாவது போய்த்தொலையென்றாய்
என்னைப் பெற்றதற்கு
எருமையைப் பெற்றிருக்கலாமென்றாய்
படிக்காமல் விளையாண்ட
போதெல்லாம் அதட்டினாய்
அப்பாவிடம் சொல்லி
அடிவாங்கித் தந்தாய்.

தேர்வில் தேர்ச்சியடையவில்லை நான்
தொலைந்தேன் இன்று உங்களிடம்.
இனி உனக்கு தொந்தரவில்லை
இதோ தட்டப் போகிறேன் கட்டையை.
.
.
.
.
.

"அய்யோ....
அய்யோ....
எம்புள்ள
எம்புள்ள
என்ன செய்வேன்,
இப்படி செஞ்சுபுட்டானே பாவிமகன்"
பரிதவித்தாள் தாய்.

"நான் பாஸாகலம்மா,
நீ எப்படியும் அடிப்ப,
நான் போறேன்"
முற்றுப் புள்ளி வைக்காமல்
முற்றுப் பெற்றுவிட்ட
கடிதத்தின் முற்றுப்புள்ளியானது
கண்ணீர்.

[படிப்பென்பது அவசியம்தான், ஆனால் கட்டாயமல்ல. குழந்தைகளை அளவான எதிர்பார்ப்போடே வளருங்கள். பின்னர் அழாதீர்கள்]

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal