என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, July 25, 2008

கார்த்திகை தீபம்

நட்சத்திரங்களைத் தெருவெங்கும்
நட்டு வைத்தாற்போல தீபம்,
வானத்து தேவதைகளின்
வளமான ஆபரணமென
மின்னும் ஒளிச்சுடர்,
தீபத்தின் மெல்லிய வெளிச்சத்தில்
தேவதைகளாய் மாறிய நங்கைகள்,
காதுத் தோடுகளும் மூக்குத்திகளும்
கலங்கரை விளக்கமாக மாறி
கட்டிளங் காளைகளை
கப்பலாய் கரை ஒதுக்கும்,
இரவிலும் தெரியும் வானவில்லாய்
தெருவாசல் கோலங்கள்,
அகல்விளக்கு ஒவ்வொன்றாய்
அணையத் துடிக்கும் வேளையிலே
கரத்தால் அணைகட்டியே
காத்திடும் உணர்ச்சிகள் வெள்ளந்தி,
இனிப்புகளாக பண்டங்களும்
இல்லங்களும் நிறையும் தேன்சிந்தி!

1 comments:

said...

////நட்சத்திரங்களைத் தெருவெங்கும்
நட்டு வைத்தாற்போல தீபம்,////

இவ்வுவமை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. வாழ்த்துகள்.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal