என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, July 4, 2008

சிறகடிப்புகள்

பெற்றோரின் பிம்பங்களில்
புதைந்து போன சுயத்தைக்
காண முடிகிறது

எல்லை இல்லா
எதிர்பார்ப்புகளின் சுமையின்
ஒரு மாத விடுப்பை
ஓரக் கண்கள் காட்டுகிறது

நாளையின் கவலைகளில்
நசுங்கிய நினைவுகள்
இன்றைய கனவுகளில்
இறக்கை வளர்த்தது புரிகிறது

அட்டவணையிலேயே
அடங்கிப் போகும்
அன்றாட வாழ்க்கையின்
அகோரப் பிடியிலிருந்து
விடுபட்டது தெரிகிறது

கணக்குப் பூதங்களிலும்
காகிதப் பேய்களிலும்
பயந்து ஒதுங்கிய
புன்சிரிப்பு வாய்விட்டு
வெளியே வந்து வழிகிறது

ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் பூக்களின்
அணிவகுப்பாய்த் துள்ளும்
அந்தச் சிறுவனின்
மேகக் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளியாய்ப் போனது
இன்னும் மூன்று வாரம்தான்
இந்த விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டிடனும் என்று
முணங்கிய தந்தையின் சொல்லில்.

3 comments:

said...

/அட்டவணையிலேயே
அடங்கிப் போகும்
அன்றாட வாழ்க்கையின்
அகோரப் பிடியிலிருந்து
விடுபட்டது தெரிகிறது/

நல்ல இருக்கிறது

said...

////ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் பூக்களின்
அணிவகுப்பாய்த் துள்ளும்
அந்தச் சிறுவனின்
மேகக் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளியாய்ப் போனது
இன்னும் மூன்று வாரம்தான்
இந்த விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டிடனும் என்று
முணங்கிய தந்தையின் சொல்லில்.////

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

said...

நன்றி திகழ்மிளிர், மற்றும் அமுதா. உங்கள் பின்னூட்டங்கள்தான் பெரும் சக்தியைத் தருகிறது.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal