என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, July 24, 2008

வானவில்லாய் வந்து போகிறாய்

செப்புச் சாமானில் நீ
சமைத்துக் கொடுத்த
மிளகாய்த் தூள் குழம்பு ருசி
எந்தக் குழம்பிலும் வந்ததில்லை

குச்சி ஐஸ்சிலும்
சவ்வு மிட்டாயிலும்
சிவந்த நாக்கு
மாறவில்லை இன்றும்

எனக்காகவே நீ
பாவாடையோரத்தில்
ஒளித்து எடுத்து வரும்
கடலை மிட்டாய் சுகம்

ஆற்று மணலில் விளையாட்டும்
அந்தி வேளைப் பொழுதில்
திண்ணையில் கதையும் பேசிய
தருணங்கள் மனதிலேயே இருக்கிறது

பள்ளிக் கூடத்தின் சைக்கிள்
பயணத்தில், என் முதுகில்
எழுதிக் காட்டிய
எழுத்துக்கள் எனது ஆயுள்ரேகைகள்

நிழலாய் என்னுடன்
நீ இருந்த பொழுதின்
பெருமைகள் புலப்படுவதென்னவோ
வானவில்லாய் நீ வந்துபோகும்
இந்தப் பொழுதில்தான்.

சமைந்துவிட்டாயாமே?
சத்தியமாய்ப் புரியவில்லையெனக்கு!

- ஒளியவன்

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal