என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, July 19, 2008

நான் என்பதும் நீதான்

கானல் நீராகிப் போன
கணங்களோடு என் வாழ்வு
காயப்பட்டுவிட்ட மனதில்
களையப் படாமலிருப்பதுன் நினைவு
சிறகு முளைத்து
சீறிப் பறக்கும் வேளையிலே
ஒற்றைச் சிறகோடு
முற்றுப் பெற்றதென் பயணங்களே

தோட்டத்தின் மலர்கள்
தினம் தினம் பூத்திடும்
வாசம் மட்டும் உள்ளே
வராமல் எங்கோ போய்விடும்
காலைக் காப்பி முதல்
காட்சியெங்கும் நீயடி
மனைவியே நீ இறந்தபிறகும்
மண்ணிலென் வாழ்க்கை வீணடி

மீதமெதும் இல்லாமல் காலம்
மெல்ல அழித்திடுமோ நம் உறவினை
மிஞ்சிப்போனால் அது வென்றிடலாம்
மிச்சமின்றி அழித்தாலென் உயிரினை
இரண்டாம் திருமணத்தை
இதயம் நாடியதில்லை இது மெய்தான்
காமத்தைத் தாண்டிய நம்
காதலில் நான் என்பதும் நீதான்.

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal