என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, April 30, 2009

காதல், கானகம் - பகுதி 37

நீண்ட பயணத்திற்குப் பின்
நின்றது கால்கள்.

இதுதான் சரியான
இடம், இங்கே
நம்மை யாரும்
நெருங்க முடியாது.

அவர்களது கட்டை
அவிழ்த்து விடுங்கள்
என்றான் தலைவன்.

கண்கள் திறந்தது
கலங்கலாக பார்க்க
ஆரம்பித்த பார்வை
ஆழமாக பார்க்கத் தொடங்கியது.

விடவில்லை; மீண்டும்
வினவினான் யார் நீங்கள்?

நாங்கள் போராளிகள்
நலிவடைந்த அன்பை
அகிம்சையால் பெறமுடியாமல்
ஆயுதம் ஏந்தியவர்கள்.

மண்ணில் கொஞ்சம் மட்டுமே
மிச்சமிருக்கும் அன்பெனும்
ஈரம் காய்வதற்கு முன்னே
எங்கள் குருதி கொட்டியாவது
தழைக்க வைக்கவிருக்கும்
தன்னலமற்றவர்கள்.

தன்னலமற்றவர் செய்யும்
தர்மமா இது?
அகிம்சை வெறுத்து
இம்சை எடுத்த நீங்கள்
தொண்டு செய்யப் போகிறீர்களா?
உங்கள் குருதியில்
பொங்குவது அன்பாயிருக்காது
நிச்சயம் வெறியாய்த்தானிருக்கும்
வெம்பியழுதன மதியின்
வார்த்தைகள்.

வாயை மூடு!
வார்த்தைகளைக் கூட எங்களது
சுயநலத்திற்காக
செலவழிக்காத கூட்டம் நாங்கள்.

நீங்கள் பிறந்ததுமுதல்
உங்கள் உயிரைப்
பிரியும் வரை
பிணியாக வாழ்பவர்கள்.

ஒன்று மட்டும் சொல்கிறேன்
ஒரு காதிலாவது வாங்கிக்கொள்
இந்தப் போராட்டம்
எந்தப் பிரிவினருக்கும்
பொதுவானது.

உனது வாழ்விற்கும் சேர்த்துதான்
எமது வாழ்க்கையை
பணையம் வைத்துப்
போராடுகிறோம்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal