என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, April 29, 2009

காதல், கானகம் - பகுதி 36

போகப் போகப்
புரியும்,
கட்டுங்கள் அவரது
கை, கால்களை
கருப்புத் துணியிட்டு
கண் மறையுங்கள்
என்றான் கூட்டத் தலைவன்.

வில்லிருந்து புறப்பட்ட
அம்பு போல் இருந்தது
அவர்கள் செயல்.

கண்ணிருந்தும்
குருடர்களானார்கள்
கையிருந்தும்
கையாலாகதவர்களானார்கள்
முதுகெலும்பிருந்தும்
அடிமைகளானார்கள்.

ஆண்டுகள் பல காதலனுக்குத்
தொண்டுகள் செய்ய வேண்டும்
என்றெண்ணியது மதியின் ஒரு மனது.
இன்றைய பொழுதே
இறுதி எனப் பட்டது.
இருப்பினும் இரண்டரை மணிநேரப்
பயணத்தில் அடைந்த
பயனே போதுமென்றது
பின்னொரு மனது.

நடப்பதேதும் புரியாததாய்
நடந்து கொண்டிருந்த
காதல், நடக்கும்
கணத்தை தனதாக்கிக்
கொண்டான்.

யார் இவர்கள்?
என்ன இவர்கள் கருமம்?
கொல்வதற்காக நிச்சயம்
அழைத்துச் செல்லவில்லை.
பணையக் கைதிகள் ஆகினோமோ?
திருமணம் என்னவாகும்?
முதலில் உயிர் பிழைப்பது
முடியும் காரியமா?
இம்ரான், சாமியின் வாழ்வு?
இவர்களை தாக்கும்பொழுது
எவறேனும் பாதிக்கப்பட்டுவிட்டால்?
அமைதியே சிறந்தது.
அப்படியானால் தப்பித்தல்?
அதற்கான நேரத்திற்கு காத்திருத்தல் வேண்டும்.

கனவு போல்
கணத்திற்கொரு எண்ணம்
ஓடிக்கொண்டேயிருந்தது
ஓநாயின் ஊளைகளை
ஓயாமல் ஓராயிரம் முறை
காதலின் காதில்
கேட்டுக்கொண்டிருந்தது.

குழம்பிய குட்டை
கொஞ்சம் கொஞ்சமாய்
தெளிவாவது போன்று
தெளிந்தது காதல் மனது.

முடிந்துவிட்டது எல்லாம்
முடியும் வரை இனி
போராடுவோம் என்றெண்ணினான்.
பணையமாக தன் தலை வைத்தேனும்
இவர்கள் மூவரையும்
காத்திட துணிந்தான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal