என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Thursday, April 23, 2009

காதல், கானகம் - பகுதி 32

மிட்டாய்க்குச் சண்டையிடும்
சுட்டிக் குழந்தைகள் போல
சண்டையிடுவதைக் கண்டு
சமாதானம், சமாதானம்
என்றாள்.

சமாதானத்தை
சரி பாதியாய் ஏற்றனர்...
இங்க பேசிகிட்டு
இருங்க, நாங்க
முடிஞ்ச வரைக்கும்
மூலிகை பறிச்சுட்டு
வர்றோம் என்றனர்.

நாய் குட்டி போல்
அவன் மடியில்
அடைக்கலமானாள்.

நெற்றி மறைக்கும்
நீண்ட முடிகளை கோதினான்.
அவள் முகத்தில்
அழகாய் கருஞ்சாமரம்
வீசிக் கொண்டிருக்கும்
விழி இமை தொட்டான்.
கண் மூடினாள்.

நீ நம்பும் அளவிற்கு
நின் கண்கள் எனை
நம்பவில்லை.

நான் வேறு
என் கண்கள் வேறா?

உன்னை நான் தொடும்போது
சுன்னமிட்ட நாக்குபோல்
நீ சிவந்து மலர்கிறாய் - ஆனால்
நின் கண்கள் என்னவோ
எனைக் காண விருப்பமின்றி
இமைகளை மூடிக்கொள்கிறது.

அது வெட்கத்தின்
அறிகுறி.
பெண்டிரின் வெட்கம்
கண்களிலும்
புன்னகையிலும்தான் பெரிதும்
புதைந்திருக்கும்.

சரி,
இமைகளைத் தொடும் போது
இரக்கமில்லாமல் கண்ணைக்
குத்திவிடுவேனோவென
கண் ஏன் மூடிக் கொள்கிறது.

விழியில் படிந்திருக்கும்
உங்கள் பிம்பம்
அழிந்துவிடக் கூடாதெனும்
அக்கறையோடுதான்.

சாமர்த்தியமான பேச்சு
சடுதியில் இதற்கு ஒரு
பரிசு கொடுத்தாக வேண்டும்.

என்ன பரிசு?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal