என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, May 1, 2009

காதல், கானகம் - பகுதி 38

எனது வாழ்க்கைக்காக
என்ன போராடுவாய்?
இரண்டு வாரத்தில் எங்கள்
இருவருக்கும் திருமணம்.
அதை நீ
இறுதி ஊர்வலமாக்க
இருக்கிறாய்.
இவர்கள் என்ன தவறு
இழைத்தார்கள் உனக்கு?
போராட வேண்டியதெனின்
போராட்டத்திற்கு
பொருத்தமானவர்களை
பொறுக்கியிருக்க வேண்டும் என்றாள்.

எத்தனை முறை
எடுத்துரைத்தாலும்
சுயநல புழுதியில்
சிக்கிக் கொண்டிருக்கும்
உன்னைப் போல
உள்ளோர்களுக்குப் புரியப் போவதில்லை.

நாட்டின் பொதுநலத்திற்காக
நாங்கள் உயிர் கொடுக்கத்
துணிகிறோம், ஆனால்
துளியும் இதை அறியாது
உன் உடல், உன் மன
உணர்வுகளுக்காக
திருமணம் பற்றித்
தெரிவிக்கிறாய் என்னிடம்.

நீ பேசிய வார்த்தை
நிரந்திரம் இல்லாதது
கண்ணிமைக்கும் நேரத்தில்
கொலை செய்துவிடுவேன் உன்னை.
ஆனால் கொலை செய்வது
அணுவும் எனது நோக்கமல்ல.
பேசாமல் நீயிருப்பதே எனது
பொறுமைக்கு நல்லது.

சடுதியில் விரைந்து
சஞ்சலப் பட்டவளை
தடுத்தான் காதல்.
தானே பேசலானான்.

இந்த காட்டின்
ஐ.எஃப்.ஸ் அதிகாரி நான்
உங்களது கோரிக்கையை
என்னிடம் சொல்லுங்கள்.

செய்ய முடியும்
செயலாயின் நானே செய்கிறேன்,
முடியா விட்டாலும் - உங்கள் பணி
முடியும் வரை நான்
பணையக் கைதியாய் இருக்கிறேன்
பாவம் இவர்கள்,
அனுப்பிவிடு.

நீ யாரென்று எல்லாம்
நான் அறிவேன்.
உங்கள் உயிருக்கு
இடையூரு செய்வது
இங்கே யாருடைய
நோக்கமுமல்ல - அதனால்
நெஞ்சை திடப்படுத்திக்கொள்.

அடர்ந்த குழப்பங்கள்
அகன்று தெளிவானான்.

நான் உங்களை
நிச்சயம் மதிக்கிறேன்
உங்கள் கோரிக்கைதான் என்ன?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

0 comments:

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal