என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, April 10, 2009

நட்பில் இது எந்த தளம்?

நம் நட்பை
எப்பொழுது
மௌனத்திற்கு விற்றாய்?

உன் உதடுகளுக்கும்
என் காதுகளுக்கும்
நடுவில் தடுப்புச்சுவர்
எப்பொழுது வந்தது?

எனது தனிமைக்
குளத்தில் கல்லெறிந்துவிட்டு
தளும்பாத குடமாக
திரிகிறாயே எப்படி?

உன் வெளிக்கு
உள்ளே இடி
இடிக்கிறதோ என்னவோ
நான் அறியேன்,
உன் முகமூடி மறைத்திருக்க...

மௌனக் காட்சி
அனைத்திலும் உனது
எண்ணத்தின் வாசற்
கதவுகள் திறந்து
கொள்கின்றன எனக்கு.

பிரச்சினை
ஒரு குழந்தையன்று
பாதுகாத்து சுமக்க,
அது மலம்
உடனே புறந்தள்ளி விட வேண்டும்.

என் தனிமையில்
உனது விடுகதைகள்
வலை பின்னிக் கொண்டிருக்கிறன
அதற்குள் என் சொற்கள்
சிக்கிச் சாகிறன.

கண்மூடி
மனம் திறந்தால்
அந்தகாரச் சிரிப்பொலிகளும்
மந்தமான பார்வைகளும்
புன்னாதரனாய் ஆக்குகிறன
என்னை.

என் இதயத்திலேயே
இடம் இருக்கையில்
இமையிடுக்கில் நின்று கொண்டு
இருக்கிறாயே, என்ன ஞாயம்?

அட்சய பாத்திரத்தின் உணவும்
நட்பில் உரையாடல்களும்
வற்றிவிடவும் கூடுமோ?

உனது வாய்க்குப்
பூட்டுப் போட்ட
என் கருத்து
என்ன?

உனது அமைதிக்கு
வழிவிட்ட எனது
வார்த்தை என்ன?

நம்
அமைதித் தீயில்
தீக்குளித்துச் செத்த
சொற்கள் யாவும்
சூன்யத்தில் பேய்களாக மாறி
தனிமையில் என்னை
தகிக்கிறனவே அறிவாயா?

நம் வார்த்தைகளைக்
கொன்று அதன்
குருதி குடித்து,
பௌர்ணமி நேரத்து
தங்க நிலாவும்
தீச்சிவப்பாய்
திரிகிறதே உணர்ந்தாயா?

எண்ணங்களுக்கு முகமூடியிட்டு
கண்களுக்கு கடிவாளமிட்டு
கடந்து போகிறாயே - சொல்
நட்பில் இது எந்தத் தளம்?

2 comments:

said...

nee yentha thalathil avanai/avalai vittuvittu vanthaayo.... anehamaaha antha thalamaahaththaan irukkum.

said...

நீன்னு நீங்க அழைக்குறத பார்த்தா தெரிஞ்சவங்கதான்னு தோனுது. சரி உங்க பெயரை தெரிவிச்சா நல்லா இருக்கும். :-)

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal